districts

விருதுநகர் சந்தையில் பாசிப் பருப்பு, உளுந்தம் பருப்பு விலை உயர்வு

விருதுநகர், டிச.11- விருதுநகர் சந்தையில் பாமாயில் விலை  சற்று குறைந்தது. அதேவேளை, பாசிப் பருப்பு மற்றும் தொலி உளுந்தம் பருப்பின் விலையானது உயர்ந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டி யல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகி றது. அந்த வகையில், பாமாயில் விலை யானது கடந்த வாரத்தை விட சற்று குறைந்  துள்ளது. அதாவது, கடந்த வாரம் 15 கிலோ பாமாயிலின் விலையானது ரூ.1570க்கு விற்  பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த  வாரம் ரூ.40 குறைக்கப்பட்டு ரூ.1530க்கு விற்கப்படுகிறது. பாசிப் பருப்பின் விலை கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்துள்ளது. கடந்த வாரம்  குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9700-க்கு விற் பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.100  உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.9800க்கு விற்கப்படுகிறது. கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த   தொலி உளுந்தம் பருப்பின் விலையானது, இந்த வாரம் ரூ.200 உயர்ந்து தற்போது ரூ. 9400க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், கடந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4500க்கு விற்பனை செய்யப் பட்டு வந்த கடலை புண்ணாக்கின் விலை யானது, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து தற்போது ரூ.4600க்கு விற்கப்படுகிறது. பிற  அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.