districts

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகில் உள்ள அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பந்துவார்பட்டி கிராமத்தில் குரு ஸ்டார்   எனும் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம் போல இன்று காலை பட்டாசு தயாரிக்க   ஆயத்தப் பணியாக பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் அச்சங்குளம் மற்றும் நடுச்சூரங்குடியைச் சேர்ந்த 4 பேர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது ஊராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

இந்த வெடி விபத்தில் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின.

கட்டட இடிபாடுகளில் சிக்கி நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வெடி விபத்து குறித்த தகவல் அறிந்து சாத்தூர் மற்றும் ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சாத்தூர் நகர் மற்றும் ஏழாயிரம்பண்ணை காவல் துறையினர் சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் ஆகிய சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த நபர்களில் ஒருவரின் பெயர் மற்றும் அடையாளம் தெரிய வந்த நிலையில் உயிரிழந்தவர் அச்சங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 41 என்பது தெரியவந்துள்ளது மேலும் 3 பேர் உடல்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றன.

;