திருவில்லிபுத்தூர், டிச.6- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே வெம்பக் கோட்டை காளவாசல் பெரியார் நகரில் வசிப்பவர் பாலசுப்பிர மணியன் மகன் சக்திவேல் (வயது 20). கட்டிட தொழிலாளி யான இவர், கடந்த 5.6.2021 அன்று செல்போன் சார்ஜர் வாங்க வந்த 8 வயது சிறுமியை வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் ராஜ பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். திருவில்லி புத்தூரில் சிறார் பாலியல் குற்றத்தடுப்பு சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி கே பூர்ண ஜெயஆனந்த் ,குற்றம் சாட்டப்பட்ட சக்தி வேலுக்கு 20 வருடம் சிறை தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.