districts

எண்ணெய் செக்கில் சிக்கி வாலிபர் பலி

சோளிங்கர், மார்ச் 28- ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் போர்டிங் பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (42).  இவர் சோளிங்கர் பஜாரில்  எண்ணெய் செக்கில் வேலை  செய்து வந்தார். வழக்கம் போல சுரேஷ் செவ்வாய்க் கிழமை காலை எண்ணெய் செக்கில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செக்கில் கை  சிக்கியது அவர் சுதாரிப் பதற்குள் அவரை முழுவது மாக செக் இழுத்துக் கொண்டது. இதில் அவரது உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோளிங்கர் காவல் துறை யினர் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இதுகுறித்து வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுரேசுக்கு மீனாட்சி என்ற மனைவியும், ஜெயபாரதி என்ற மகளும், மோகித் என்ற மகனும் உள்ளனர்.

;