districts

ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டை, மார் 15- ராணிப்பேட்டையில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மார்ச் 18 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாலாஜா அரசு அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஜி.கே. வேர்ல்ட் ஸ்கூல் இணைந்து நடத்து கின்றது. இதில், 150 க்கும் மேற்பட்ட தனி யார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இளைஞர்கள் கல்வி தகுதிக்கேற்ப பணி நியமனம் செய்யயுள்ளனர். ஆகவே இவ் வேலை வாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.  விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தன்குறிப்பு மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் எனற மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி தெரிவித்துள்ளார்.

;