ராணிப்பேட்டை, மார்ச் 26 - விவசாயிகள், தொழிலாளர்கள் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளு மன்றத்தை நோக்கி ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் பேரணியை விளக்கி ராணிப் பேட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் நடை பெற்றது. விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், சிஐடியு சார்பில் ராணிப் பேட்டை மாவட்டம் கலவை தாலுக்காவில் வாழைப்பந்தல், ஆயர்பாடி, மேல்புதுப் பாக்கம், சொரையூர், பொன்னம்பலம், தட்டச் சேரி, இருங்கூர் உள்ளிட்ட 7 இடங்களில் சனிக்கிழமை (மார்ச். 25) பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, மாவட்ட செயலாளர் எல்.சி.மணி, பொருளாளர் ராதா கிருஷ்ணன், அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. சந்திரன், மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே. சேகர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டார செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.