ராணிப்பேட்டை, டிச. 9- ராணிப்பேட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பழங்குடி மலை வாழ் மக்களை அச்சுறுத்தி, மிரட்டும் மாவட்ட புலனாய்வுத்துறையினருக்கு கடும் கண்டனம் தெரி விக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், பாறை மேட்டில் வசிக்கும் தமிழ்நாடு பழங்குடி மலை வாழ் மக்கள் சங்க உறுப்பினர் கே.சிவா, அப்பகுதி மக்களை இணைத்து சங்கப் பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில், மக்களின் பிரச்ச னைகளுக்காக தொடர்ச்சியாக போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை அண்மையில் இணைத்துக் கொண்டனர். இந் நிலையில், புலனாய்வுத் துறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை (டிச. 5) சிவாவின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. எதிர் முனையில் நான் சிஐடி பூபதி பேசுகிறேன். நீங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து உள்ளீர்களா..? ஏன் இணைந்தீர்கள்.? உங்களுக்கு அரசு சலுகைகள் எதுவும் இனி கிடைக்காது என்று அச்சுறுத்தியிருக்கிறார். மேலும், இதுகுறித்து செய்தியை அனுப்பியது யார் என்றெல்லாம் விசாரணை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எல்.சி.மணியை கைது சிறையில் அடைப்பேன் எனவும் மிரட்டி யுள்ளார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், விவசாயிகள் சங்கத் மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, கே.சிவா ஆகியோர் வியாழனன்று (டிச. 8) மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரை சந்தித்துள்ளனர். அப்போது பழங்குடி மலைவாழ் மக்களையும் சங்கத்தின் தலைவர்களையும் மிரட்டிய காவல்துறையின் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வரும் பூபதி மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.