districts

img

சாயல்குடியில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், மே 28- இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளில் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக்கோரியும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை அனைத்துப் பகுதிகளுக்கும் சரியான முறையில் கொண்டு  சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் கடலாடி மேற்கு ஒன்றியத்தின்  சார்பாக சாயல்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் என். கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் டி.மாரிகுமார் , மாவட்ட துணைச் செயலாளர் டி சுரேந்தர் பாரதி ஆகி யோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி. மயில்வாகணன் ஆதரித்துப் பேசினார். தாலுகாக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

;