districts

img

ஒன்றிய அரசின் பணித் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்புக்கு கண்டனம் மதுரையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, அக்.13-  ஒன்றிய மோடி அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்  பில் நடத்தப்படும் எஸ்எஸ்சி  தேர்வில் மாநில மொழிகளை  புறக்கணித்து, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்து வதை கண்டித்தும் தமிழில் நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர்- புறநகர் மாவட்  டக்குழுக்கள் சார்பில் மதுரை  மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரில் வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புற நகர் மாவட்டத் தலைவர் பி.  தமிழரசன் தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க. நீதி ராஜா துவக்கிவைத்துப் பேசி னார். வாலிபர் சங்க புறநகர் மாவட்ட துணைத் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன், மாந கர் மாவட்டத் தலைவர் எஸ். சரண், மாவட்டச் செயலாளர் டி. செல்வா ஆகியோர் பேசினர். மாநகர் மாவட்ட பொருளாளர் அ. பாவேல் சிந்தன், நிர்வாகிகள் எஸ். வேல்தேவா, அ. நவீன், வி.  கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.