நிர்வாகத் தவறை மறைக்கவே சிபிஐ விசாரணை: சு.வெங்கடேசன் எம்.பி.
மதுரை, ஜூன் 5- மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற நிலையில் சென்னை, தில்லியில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் செல்வதற்கு விமான டிக்கெட் கிட்டத்தட்ட இருபது மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டிய பொ துத்துறைகள் தனியார் கைகளுக்குச் சென்றால் பகாசுர நிறுவனத்தின் லாப வேட்டைக்குத் தான் பயன்படும். விமான டிக்கெட் உயர்த்தப்பட்டதில் மனிதாபிமானம், சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லை. ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது அடுத்த கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. ஒன்றிய அரசின் நிர்வாகத் தவறை, கொள்கை தவறை மறைப்பதற்கு மூன்றாவது நபர் மீது பழியை போடு வதற்கான ஏற்பாடோ இது என சந்தேகம் எழுகிறது.
பெற்ற குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தைக்கு ஆயுள்
தேனி, ஜூன் 5- தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து திங்கள்கிழமை, தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து. பழனிசெட்டிபட்டி, ஜமீன் தோப்பு தெருவைச் சேர்ந்த வர் பன்னீர்செல்வம்(31). இவரது மனைவி அழகுமணி (28). இவர்களுக்கு காவியாஸ்ரீ என்ற பத்து மாத பெண் குழந்தை இருந்தது. பன்னீர்செல்வம் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்து வந்தார். இந்தப் பிரச்சனையில் அழகுமணி கணவருடன் கோபித்துக் கொண்டு, கோடாங்கிபட்டியில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார். இந்த நிலையில், பன்னீர்செல்வம் கடந்த 2020, மார்ச் 12-ஆம் தேதி கோடாங்கிபட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்று, காவியாஸ்ரீ தனக்குப் பிறக்கவில்லை என்று கூறி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில், பன்னீர்செல்வம் காவியாஸ்ரீயை தூக்கிச் சென்று கோடாங்கிபட்டி குருவன்குளம் அருகே உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் வீசி கொலை செய்தார். இது குறித்து அழகுமணி அளித்த புகாரின் மீது பழனி செட்டிபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த பன்னீர்செல்வத்திற்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
பழனியில் நகை, பணம் கொள்ளை
பழனி, ஜூன் 5- பழனி புது தாராபுரம் சாலை இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (37). இவர் பழனிய அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வரு கிறார். இவரது மனைவி கௌசல்யா இவரும் மருத்துவ ராக உள்ளார். கோகுலகண்ணன் தனது குடும்பத்தி னருடன், திருச்செங்கோட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீடடின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சிய டைந்த கோகுலகண்ணன் காவல்துறைக்கு தகவல் தெரி வித்தார். காவல்துறை விசாரணையில் வீட்டிலிருந்த 30 பவுன் தங்க நகை, ரூ. 5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. பழனி நகர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
ஆசிரியர்களுக்கும் தேவை இலவசப் புத்தகங்கள்
பழனி, ஜூன் 5- பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு 2023-2024 கல்வி ஆண்டில் இலவசப் புத்தகங்கள் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டிற்கான வகுப்பு கள் வருகிற ஜூன் 12-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள தாக கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி தொடங்கும் நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங் கபடுவது சிறப்பே. ஆனால் பாடம் நடத்தும்ஆசிரியர்களுக்கு புத்தகங்கள் எந்தக் கல்வி ஆண்டிலும் வழங்கும்முறை பின்பற்றப்படுவதில்லை. இதனால் ஆசிரியர்கள் மாணவர்களிடம் புத்தகங்க ளை இரவலாகப் பெற்றே பாடங்களை நடத்துகின்றனர். இந்தக் கல்வியாண்டு முதல் பாடம் நடத்தும் ஆசிரியர்க ளுக்கும் (ஒவ்வொரு பள்ளிக்கும் குறந்தது இரண்டு செட்) புத்தகங்களை வழங்கும் முறையை நடைப்முறைப்படுத்த தமிழக பாடநூல் நிறுவனத்தின்தலைவர், கல்வித்துறை, தமிழக அரசு ஆகியோர் பரிசீலிக்க வேண்டுமென பழனி ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் வலியுறுத்தியுள்ளது.
விருதுநகர் அருகே பேருந்து மோதி இருவர் பலி
விருதுநகர், ஜூன்.5- சிவகாசியைச் சேர்ந்தவர்கள் செல்வ கணேஷ் (30), சேதுபதி (31). இருவரும் அங்குள்ள தனியார் நிதி நிறுவ னத்தில் பணியாற்றி வந்தனர். திங்களன்று வழக்கம் போல விருதுநகரில் பணம் வசூல் செய்து விட்டு இருவரும்இரு சக்கர வாகனத்தில் சிவகாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். விருதுநகர்- சிவகாசி சாலையில் உள்ள மீசலூர் விலக்கு அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதி யது. இந்த விபத்தில் செல்வகணேஷ், சேதுபதி ஆகிய இரு வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆமத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
மின்னல் தாக்கி பெண் பலி
நத்தம், ஜூன் 5- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வி.எஸ். கோட்டை மார்க் கம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அல்லிராணி (34). இவர் அந்தப் பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டி ருந்தார். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் அல்லிராணி உயிரிழந்தார். சாணார்பட்டி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஒட்டன்சத்திரம், ஜூன் 5- ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் பகுதி யில் நாளை மின்சாரம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில், நாளை (புதன்கிழமை) மாதாந்தி ரப் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன் வலசு, பொருளுர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தி யூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் சுற்றுப்புற குக்கிரா மங்களில் காலை ஒன்பது மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்டத் தகவலை, கள்ளிமந்தையம் மின்வாரிய உதவிச் செயற் பொறியாளர் சந்தனமுத்தையா தெரிவித்துள்ளார்.
போடிமெட்டு மலைச்சாலையில் விபத்து: ஒருவர் பலி
தேனி, ஜூன் 5- கேரள மாநிலம் உடும்பன்சோலை தாலுகா பொத்த கள்ளி பகுதியில் தங்கி வேலை செய்து வருபவர் பாலன் (48). இவர் போடி பகுதிக்கு வந்துவிட்டு திங்கள்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் கேரளத்துக்கு சென்று கொண்டிருந்தார். போடிமெட்டு மலைச்சாலை யில் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கேரளத்திலிருந்து தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த ஜீப் பாலன் வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காய மடைந்த பாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குரங் கணி காவல்துறையினர் ஜீப்பை ஓட்டி வந்த போடியை அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வாலிபர் சங்க புதிய கிளை அமைப்பு
மதுரை ஜூன் 5- மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஒன்றியம் அம்மாபட்டி யில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. கிளைத் தலைவர் ஏ.அய்ய னார். துணைத் தலைவர்கள் ஏ.கருப்பசாமி, முத்துக்குமார். செயலாளர் எம்.கார்த்திக் முத்து, துணைச் செயலாளர்கள் எம்.அய்யனார், (மற்றொரு) அய்யனார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அமைப்புக் கூட்டத்தில் புறநகர் மாவட்டச் செயலாளர் தமிழரசன், மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.