திண்டுக்கல், மார்ச் 23- இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுக தேவ் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக திண்டுக்கல்லில் போதைக்கு எதிராக இருசக்கர வாகன பிரச்சார பயணம் மார்ச் 23 அன்று நடைபெற்றது. திண்டுக்கல் பழைய சக்தி தியேட்டர் அருகில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொருளாளர் என். பாண்டி துவக்கி வைத்தார். மாநிலத் தலை வர் கார்த்திக், நகர செயலாளர் பிரேம்குமார். நகர தலைவர் அஜித் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கீதா, நகர பொருளாளர் வினோத், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் முகேஷ், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் கே எஸ் கணேசன், மாரியம்மாள், ஜோதி பாசு உள்பட பலர் கலந்து கொண்டனர் பின்னர் பால திருப்பதி ஆர். எம் காலனி, காட்டாஸ்பத்திரி, ஒய்எம்.ஆர். பட்டி, ரவுண்ட் ரோடு, மரிய நாத புரம், அண்ணா காலனி, வேடப் பட்டி, சவேரியார் பாளையம், பேகம்பூர் ஆகிய பகுதியில் பிரச்சா ரம் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்
ஒன்றிய தலைவர் ஆனந்த் தலைமையில் ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் சாலையில் தொடங் கிய பிரச்சார பேரணி ரயில் நிலை யம், பஸ் நிலையம், செக்போஸ்ட், புதுச்சத்திரம் வழியாக திண்டுக்கல் சென்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் இளையபாரதி, ஒட்டன்சத்திரம் ஒன்றிய தலை வர் கிருஷ்ணகாந்த், ஒன்றிய பொரு ளாளர் மணிமுத்துப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சின்னாளப்பட்டி சின்னாளப்பட்டியில் வாலிபர் சங்க பிரச்சாரக்குழுவினருக்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் சூசை மேரி, சிஐடியு ஒன்றிய கன்வீனர் வி.கே.முருகன் தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது. அம்மைய நாயக்கனூரில் வாலிபர் சங்க நிலக்கோட்டை ஒன் றிய பொருளாளர் செங்கோடன் மற்றும் பலர் பங்கேற்றனர். சாணார்பட்டி ஒன்றியம் ஒத் தக்கடையில் மாவட்ட தலைவர் சிலம்பரசன் தலைமையில் பிரச்சா ரம் நடைபெற்றது.பேரணியை இரு தய கல்லூரி தாளாளர் இன்னாசி முத்து துவக்கி வைத்து உரையாற்றி னார். வாலிபர் சங்கதலைவர் ராம சாமி, பொருளாளர் தங்கபாண்டி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நத்தத்தில் பேரூராட்சி கவுன் சிலர் விஜய வீரன் பேரணியை துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டத் தலைவர் சிலம்பரசன் நிர்வாகிகள் சர்மா, சீனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.