கோவை, ஏப்.25- கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்கள், எழுத்தா ளர்கள், இலக்கியவாதிகளுக்கு ஜெயகாந் தன், மீரா, புதுமைப்பித்தன், சக்தி வை. கோவிந்தன் பெயர்களில் விருதுகள் வழங் கப்பட்டு வருகின்றன. அதன்படி, விஜயா வாச க0ர் வட்டம் சார்பில் விருதுகள் வழங்கும் விழா, கோவை பூ.சா.கோ. பொறியியல் கல் லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கவிஞர் க.வை.பழனி சாமி தலைமை ஏற்றார். விஜயா பதிப்ப கத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் வர வேற்றார். எழுத்தாளர் எம்.கோபால கிருஷ்ணன் விருதாளர்களை அறிமுகப் படுத்தினார். கவிஞர் அமுதோன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதா ளர்களுக்கு விருதுத்தொகை மற்றும் பாராட் டுப் பத்திரங்களை வழங்கி கெளரவித்தார். ஜெயகாந்தன் விருது, “கல்லாப்பிழை” என்ற கவிதை நூலின் ஆசிரியரான ஈரோட்டைச் சேர்ந்த க.மோகனரங்கன், புதுமைப்பித்தன் விருது “கடசல்” என்ற நாவலை எழுதிய தேனியைச் சேர்ந்த ம.காமுத்துரை, கவிஞர் மீரா விருது, “ஒருத்தி கவிதைகளுக்கும் இரவு களுக்கும் திரும்புகிற பொழுது” என்ற கவிதை நூலை எழுதிய பொன்முகலி என்கிற ந.தீபா, சக்தி வை.கோவிந்தன் விருது, கோவை மாவட்ட மைய நூலகர் பி.ராஜேந்தி ரன், வானதி திருநாவுக்கரசு விருது, சேத்தி யாத்தோப்பு சரஸ்வதி பூங்கா விற்பனையா ளர் ஜி.ரவி ஆகியோர்களுக்கு வழங்கப்பட் டது. இதில், ஜெயகாந்தன் விருது பெற்ற க. மோகனரங்கத்துக்கு ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது. மற்ற விருதாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் பாராட்டு பத்திரங்கள் வழங்கப் பட்டன. இறுதியில், விருதாளர்கள் ஏற்புரை யாற்றினர். இந்த நிகழ்ச்சியில் விஜயா பதிப்ப கத்தின் நிர்வாகி வே.சிதம்பரம், புரவலர் சுப. சுப்பையா மற்றும் எழுத்தாளர்கள், இலக் கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்ட னர். முனைவர் உஷாராணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.