சின்னாளபட்டி, ஏப்.10- உலகக்கோப்பை ரோல் பால் ஸ்கேட்டிங் போட் டிக்கு சின்னாளபட்டி மாண வர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். ஆறாவது ரோல்பால் உலகக்கோப்பை போட்டி கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வருகிற ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள் ளது. இந்திய அணிக்கான மாணவர்கள் தேர்வு சின்னா ளபட்டியில் உள்ள ராஜன் விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் நடைபெற்றது இந்தப் போட்டியில் பங் கேற்க இந்தியா முழுவதும் இருந்து 40 ரோல்பால் விளை யாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சின்னாளபட்டி ராஜன் விளை யாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற சுஷ்மிதா பிரதீப் ஆகிய இருவர் தேர்வு செய் யப்பட்டனர். இவர்களை தென்னிந்தியச் செயலாளர் எம்.பி.சுப்பிரமணியம், மாநி லச் செயலாளர் கோவிந்த ராஜ், ராஜசேகர், ஸ்கேட்டிங் மாஸ்டர் பிரேம்நாத் உட்பட பலர் பாராட்டி வழியனுப்பி வைத்தனர்.