திண்டுக்கல், ஏப்.24- திண்டுக்கல்லில் உலக புத்தகத் தினத்தை முன் னிட்டு பாரதி புத்தகாலயத் தின் சார்பாக புத்தகக் கண் காட்சி நடைபெற்றது. திங்க ளன்று நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை ஜி.டி.என். கலைக்கல்லூரி முதல்வர் பி. பாலகுருசாமி திறந்து வைத் தார். முதல் விற்பனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.நாசருதீன் தொடங்கி வைத்தார். முதல் பிரதியை நத்தம் வட்டாட்சி யர் ம.சுகந்தி பெற்றுக் கொண்டார். நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வி. பாபு, பள்ளிக்கல்வித்துறை இல்லம் தேடிக்கல்வி சார் பில் ச.மோசஸ், குருபிரசாத், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் கே.எஸ்.கணேசன், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க மாந கர் கிளைத் தலைவர் வைத்தி லிங்க பூபதி. இந்திய மாண வர் சங்க மாவட்டத்தலைவர் ஏ.கே.முகேஷ், பாரதி புத்த காலயத்தின் நிர்வாகிகள் என்.காந்தி, கே.வீரய்யன், கே.நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் இராமநாதபுரத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார் பில் புத்தக வாசிப்பு நடை பெற்றது. மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வனின் “சாமி களின் பிறப்பும் இறப்பும்” என்ற புத்தகத்தை மாவட்டச் செயலாளர் டாக்டர் வான் தமிழ் இளம் பரிதி தலைமை யில் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாசித்தனர்.