districts

img

நலிவடைந்த தையல் தொழிலால் பரிதவிக்கும் தொழிலாளர்கள் - குணசேகரன்

‘ஆ ள் பாதி ஆடை பாதி’ என்பது உலக நியதி. உடைகளை தயாரிப்பது என்பது ஒரு கலை. ஆடைகளை ஒவ்வொரு மனிதனுக்கும் தகுந்தார் போல் மனிதர்களின் நெளிவு-சுளிவுகளை அறிந்து பொருத்தமாக தைத்து கொடுப்பதுதான் தையல் கலைஞர்களின் தனித்திறமை. 

பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிகள் மலை  போல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணி களை தைப்பார்கள். தற்போது ‘ரெடிமேட்’ என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகளின் மோகம் அதி கரித்து, கடைகளுக்கு நேரடியாக சென்று விருப்பமான உடையை விரும்பிய கலரில் மக்கள் வழங்கி னர்.  இதனால் துணி எடுத்து தைக்க  வேண்டும் என்ற பழக்கம் மக்களி டையே வெகுவாக குறைந்து வரு கிறது. இதனால், தையல் தொழில் நசிந்து, தையல் கலைஞர்கள் நலிந்து வருகின்றனர்.  மாற்று வேலையைத் தேடி செல்லும் 80 சதவீதம் தையல் தொழிலாளர்கள் இதுகுறித்து சின்னாளப்பட்டி யைச் சேர்ந்த ராஜவேலன் என்ற தையல் கலைஞர் கூறுகையில், ‘‘கடந்த 50 வருடத்திற்கும் மேலாக தையல் தொழில் செய்து வரு கிறோம். 15 வருடங்களுக்கு முன்பு  தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே துணிகள் ஆர்டர்கள் வந்து குவியும். 10-க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகலாக வேலை செய்வோம்.  தற்போது ரெடிமேட் ஆடைகள் மோகம் அதிகரித்து வருவதால், துணிகளை வாங்கி தைக்க மக் கள் முன்வராததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிப்படைகிறது. மேலும் தையல் கடைகளும் குறைந்து வருகின்றன.  தற்போது 80 சதவீதம் தையல்  தொழிலாளர்கள் மாற்று வேலை யை தேடி செல்லும் நிலைமை உள்ளது. எங்கள் கடையிலேயே சுமார் 10-க்கும் அதிகமான தையல்  தொழிலாளர்கள் கடந்த 15, 20 வரு டங்களுக்கு முன்பு வேலை பார்த்து வந்தனர்.  தற்போது தைப்பதற்கு துணி கள் வராததால் ஒருவர், இரண்டு பேர் மட்டுமே வந்து தைக்கும் நிலைமை உள்ளது. தமிழக அரசு எல்லோர் நலனிலும் அக்கறை காட்டி வருவது போல் எங்கள் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும்’’ என்று கூறினார்.

நலவாரிய சலுகைகள் வழங்கிடுக!

தையல் தொழிலாளர் நலம்  குறித்து தையல் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் குணசேகரன் கூறுகையில், ‘‘தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தையல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட தையல் தொழிலாளர் நல  வாரியத்தில் தனி நிதியம் உரு வாக்கிட வேண்டும். தங்கள் ரத் தத்தையும் வியர்வையையும் முத லீடாய் போடுகின்ற தையல் தொழி லாளர் வாழ்க்கை அறுந்து கிடக்கி றது.  சேவை பணியான தையல் தொழிலாளர்களுக்கு மின்சார மானியம் வழங்கிட வேண்டும். கட்டுமான தொழிலாளர் போல் ஆட்டோ தொழிலாளர் போல் நல  வாரியத்தில் நலவாரிய சலுகை கள் வழங்கிட வேண்டும், இலவச  தையல் மிஷின் வழங்க வேண்டும்  நலவாரிய அட்டை பெற்ற அனை த்து அமைப்புசாரா தையல் தொழி லாளர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும். தமிழக அரசு சமூக நலத்துறை யில் மகளிர் தையல் கூட்டுறவு நிர்வாகங்களில் இலவச பள்ளி சீருடை தைப்பதற்கான கூலியை வருடம் தோறும் 5 சதவீதம் உய ர்த்தி வழங்கிட வேண்டும். பெண் உறுப்பினர்களிடம் பிடித்தம் செய்த  சிக்கன சேமிப்பிற்கு வட்டி வழங்கிட வேண்டும், பங்குத் தொகைக்கு டிவிடெண்ட் வழங்கியிருக்க வேண்டும், பள்ளி சீருடைகளை பேருந்தில் எடுத்துச் செல்லும் போது லக்கேஜ் கட்டணம் வாங்கு வதை கைவிட வேண்டும், தையல்  கூட்டுறவு பெண் உறுப்பினர் களுக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும் 60 வயது நிறை வடைந்த உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிடவேண்டும்’’ என்று கூறினார். ம.ஹரிஹரன்