districts

img

அரசு ஊழியர் சங்க மகளிர் துணைக்குழு சார்பில் மகளிர் தின கருத்தரங்கம்

மதுரை, மார்ச் 19-   தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மதுரை மாவட்ட மகளிர் துணைக்குழு சார் பில்  சர்வதேச மகளிர் தின  கருத்தரங்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் சங்க அலுவலகத்தில் ஞாயி றன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  மாவட்ட  அமைப்பாளர் தீ.ராஜி தலை மை வகித்தார். எஸ். பாண்  டிச்செல்வி  வரவேற்றுப் பேசி னார். அரசு மருத்துவர்களுக் கான சட்ட போராட்டக்குழு மாநிலச்செயலாளர்  மரு. எஸ். சையது தாகிர் ஹூசைன், ஜனநாயக மாதர் சங்க மாநி லச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், அரசு ஊழி யர் சங்க மாநில மகளிர்  துணைக்குழு கோ . பழ னியம்மாள் ஆகியோர் போட்டியில் கலந்துகொண் டவர்களுக்கு பரிசுகள்  வழங்கி கருத்துரையாற்றி னர்.  அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர்  ஜெ. மூர்த்தி, செயலாளர் க.நீதி ராஜா, பொருளாளர் க.சந்திர போஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலப் பொதுச் செயலாளர் ஆ . செல்வம் நிறைவுரையாற்றினார்,  மாவட்ட மகளிர் துணைக் குழு உறுப்பினர் சி.க. சுஜாதா நன்றி கூறினார்.