சிவகங்கை, மார்ச் 12- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு, சிஐ டியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கம் சிவகங்கையில் நடைபெற்றது. மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி, மாவட்ட பொருளாளர் ஜெயந்தி ,சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜ.கௌரி ,மாவட்ட குழு உறுப்பினர் ராதா, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் பாக்கியமேரி ,விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணியம்மா ,வாலிபர் சங்கன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தீபா ஆகி யோர் உரையாற்றினர். மாவட்ட துணை தலைவர் சண்முகப்பிரியா நன்றி கூறினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்கள் 100 நாட்கள் என்பதை 200 நாட்களாக அதிகரித்து, நாளொன்றுக்கு ரூ. 600 சம்பளம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, தூய்மை காவலர் ,மக்களை தேடி மருத்துவ பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். சமூகத்தின் அனைத்து பணிசெய்யும் இடங்களிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. திருவில்லிபுத்தூர் திருவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு சாந்தி தலைமை தாங்கினார் .குரு வம்மாள் வரவேற்றார் .மாவட்ட நிர்வாகி ரேணுகா தேவி, காவல்துறை சார்பு ஆய்வாளர் அமுதா ஆகி யோர் உரையாற்றினர். நிகழ்வில் ஆசிரியர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.