எழுத்தாளர் சோழ.நாகராஜனுக்கு “மதுரைக் கலைவாணர்” விருது
மதுரை, ஜூலை 1- பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மருத்துவர் சேதுராமன் போன் றோரால் தொடங்கப்பட்டு கடந்த 32 ஆண்டுகளாக மதுரை நகைச்சுவை மன்றம் செயல்பட்டு வருகிறது. ஜூலை 2 ஞாயிறன்று மன்றத்தின் அமைப்புச் செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. அதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கும் எழுத்தா ளர் சோழ. நாகராஜன் அவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக கலை வாணரின் புகழைப் பரப்பிவரும் அவரின் சீரிய செயலைப் பாராட்டி “மதுரைக் கலைவாணர்” எனும் விருது வழங்கப்படுகிறது.
இராமேஸ்வரத்தில் அனைத்துக்கட்சியினர் உண்ணாவிரதம்
இராமேஸ்வரம், ஜூலை 1- இராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தங்கும் விடுதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நீண்ட காலமாக சுவாமி பல்லக்கு தூக்கும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுப்பதோடு அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அனைத்துக்கட்சிகள் சார்பில் உண்ணா விரதப் போராட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எம். பழனிச்சாமி தலைமை வகித்து போராட்டத்தை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஜி.சிவா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் என்.ரவிச்சந்திரன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் ஜோ.ராஜீவ் காந்தி, மனிதநேய மக்கள் கட்சி நகர் செயலாளர் எம்.சையது இப்ராம்ஷா,தமிழக வாழ்வு ரிமைக் கட்சி நகர செயலாளர் ஜி.ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே கருணா கரன். சி.பி.ஐ மாவட்ட நிர்வாக குழு முருகானந்தம், தமிழ்நாடு வாழ்வு ரிமை கட்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெ.ஜெரோன் குமார், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் எஸ்.சகாயராஜ், மதிமுக நகர் செயலாளர் ஜி.வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சிவகாசி, ஜூன் 30- சிவகாசி மாநகராட்சிக் கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிவகாசி மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 29 பொருள்கள் தீர்மானமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதனிடையே சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் அனைத்து தரப்பி னர்களும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஏற்கனவே 473 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கணக்கீட்டின்படி கருத்தடை செய்யப்படாத 450 தெரு நாய்கள் மாநகராட்சி பகுதிகளில் உலா வருகின்றன. எனவே, அவற்றுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள, நாய் ஒன்றுக்கு தலா ரூ.1650 வீதம், 450 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஆகும் செலவு தொகையான ரூ.7 லட்சத்து 42 ஆயிரத்து 500 மாமன்றத்தின் அனுமதி யுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்டிடப் பணியின் போது சுவர் இடிந்து பெண் பலி; மூவர் காயம்
மதுரை, ஜூலை 1- கட்டிடப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார். மூன்று தொழிலாளர்கள் படுகாயமடைந்த னர். மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் அ.தமிழ்முரசு (30) இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது கட்டிடம் 60 சத வீதம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சுவர்களில் பூச்சு வேலை நடந்து வந்தது. சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் கட்டி டத்தின் படிக்கட்டு அமைந்துள்ள பகுதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியைச் சேர்ந்த ஜோதி (52), மூக்காயி (52), தொண்டிச்சாமி (53), கட்டையன்(41) ஆகியோர் வேலை பார்த்து கொண்டி ருந்தனர். அப்போது படிக்கட்டு, சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் நான்கு பேரும் சிக்கினர். அருகிலி ருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர். இதற்கிடையில் இதுகுறித்து தகவலறிந்த கூடல்புதூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புத்துறை யினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றி னர். இந்த விபத்தில் மூக்காயி இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய் விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மற்ற 3 பேர் காயங்களு டன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
பேருந்து மோதி வாலிபர் பலி
சின்னாளப்பட்டி,ஜூலை 1- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றி யம் போக்குவரத்து நகர் ஆலமரத்துப் பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன் ( வயது 35). இவர் ஹாலோ பிளாக் தயாரிக்கும் கம் பெனியில் வேலை செய்து வந்தார். சம்ப வத்தன்று பணி முடிந்து வீட்டுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரும்போது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதியது,இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த விபத்து குறித்து காவல் ஆய்வாளர் வெங்க டாசலம் விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரையில் மீன் சிலை அமைக்க சு.வெங்கடேசன் எம்.பி., அடங்கிய குழு
உயர்நீதிமன்றம் அமைத்து உத்தரவு
மதுரை, ஜூன் 30- இராமநாதபுரம் மாவட்டம் மோர்பண் ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திரு முருகன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். அதை நினைவு படுத்தும் வகையில் மதுரை ரயில் நிலை யத்தில் 1999-ல் 15 அடி உயரம், 3 டன் எடை யில் 3 மீன்கள் கொண்ட வெண்கல சிலை அமைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மதுரை ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கப் பட்ட போது அந்த மீன் சிலை அகற்றப்பட் டது. பணி முடிந்து பல மாதங்களாகியும் மீன் சிலை மீண்டும் அமைக்கப்படவில்லை. எனவே மதுரை ரயில் நிலையத்தில் மீண் டும் 3 மீன்கள் வெண்கல சிலை மற்றும் நீரூற்று அமைக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மதுரையில் மீன் சிலை அமைக்க வேறு இரு இடங்களை தேர்வு செய்ய மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த மனுவை வெள்ளி யன்று விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், விஜயகுமார் அமர்வு, “மதுரை ரயில் நிலை யத்தில் பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையம் காரணமாக ஏற்கெனவே இருந்த இடத்தில் மீன் சிலை அமைக்க முடியாது. ஆனால் மதுரையை ஆண்ட பாண்டிய மன் னர்களின் அடையாளமாக மக்கள் மீன் சிலையை பார்க்கின்றனர். இதனால் மதுரை யில் மாநகராட்சி எல்லைக்குள் முக்கிய சந்திப்பு அல்லது முக்கிய இடத்தில் மீன் சிலை அமைக்க வேண்டும். மீன் சிலை அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்ய மூத்த வழக்கறி ஞர் காந்தி தலைமையில் மாநகராட்சி ஆணையர், மதுரை எம்பி, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பேரவைத் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள், மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், போக்குவரத்து இணை ஆணையர், தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட மேலாளர், நெடுஞ்சாலை தலைமை பொறியாளர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு மதுரை ஆட்சியர் அலு வலகத்தில் கூடி ஆலோசனை நடத்த வேண்டும். மதுரையில் பல்வேறு இடங்க ளில் ஆய்வு நடத்தி மீன் சிலை அமைப்ப தற்கு தகுதியான இடத்தை ஒரு மாதத்தில் தேர்வு செய்து 7.8.2023-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை மீன் சிலையை ரயில்வே நிர்வா கம் பாதுகாக்க வேண்டும்” என உத்தர விட்டனர்.