districts

img

கடன் தொல்லை தேனி எஸ்.பி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்

தேனி, ஜூலை 11- கடன்காரர்கள் தொல்லை காரணமாக இளம் பெண் தேனி  மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுலகத்தில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற் பட்டது. கூடலூர் கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் சிவநேசன் மனைவி கௌமாரி (34) இவர் கடந்த இரண்  டாண்டுகளுக்கு முன்பு தனது  உறவினர்களிடம் சுமார் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இது தொடர்பாக கூடலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதில் காவல்துறையினர் பேச்சுவார்தை நடத்தி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் கொடுக்க வேண்  டும் என சொல்லி அனுப்பிவிட்டனர் .சிறிது காலம் திருப்பூ ரில் குடியேறி வேலை செய்து வந்த நிலையில் ,சில நாட்க ளுக்கு முன்பு தேனியில் உள்ள தாயாரை பார்ப்பதற்கு வந்துள்ளார் .இதை அறிந்த கடன்காரர்கள் பணம் கேட்டு  தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இதனால் மனமு டைந்த கெளமாரி திங்களன்று தேனி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு மண்ணெண் ணெய் கேனுடன் வந்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி  தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தி தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கௌமாரியை விசாரித்து வருகிறார்கள்.