உதகை, மே 30- முதுமலை புலிகள் காப்பகம் வெளிமண்டல வனப்பகுதி மற்றும் நீலகிரி கிழக்குச் சரகம் பருவ மலைக்கு முன் எடுக்கப்படும் வனவிலங்கு கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. ஊனுண்ணி மற்றும் அதன் வாழ்விட மதிப்பீடு கணக்கெ டுப்பு நான்காம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சிறப்பம்சமாக வனவிலங்குகளுக்கு தேவையான தாவரங் கள் கணக்கெடுத்தல், வன விலங்குகளுக்கு மனிதர்களால் ஏற்படும் இடையூறுகள் கணக்கெடுத்தல் நடத்தப்படுகிறது. மனித - விலங்கு மோதல்களை தடுக்கும் நோக்கில் வனத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் யானைகள், காட்டெருமை, புலி, சிறுத்தை புலி, முதலை, சிங்கவால் குரங் குகள்,மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகி றது. அவ்வாறு உள்ள வனவிலங்குகள் குறித்த கணக்கெ டுப்பு பருவமழைக்கும் முன்பும், பருவ மழைக்கு பின்பும் ஆண்டுக்கு இரண்டு முறை வனத்துறையினரால் கணக்கெ டுப்பது வழக்கம். அதன்படி முதுமலை புலிகள் காப்ப கத்தின் வெளிமண்டலம் வனப்பகுதியில் அமைந்துள்ள சிகூர் , சிங்கரா ,நீலகிரி கிழக்கு வனசரகம் பகுதியில் பருவ மழைக்கு முன்பு எடுக்கப்படும் கணக்கெடுப்பு செவ்வாயன்று துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கணக்கெ டுப்பில் தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள் கணக்கெடுப் பும், அதன் வாழ்விட மதிப்பீடு கணக்கெடுக்கும் பணி நடைபெ றுகிறது. இதில் மொத்தம் உள்ள 34 நேர்கோடுகளில் உள்ள குளங் கள், மாமிச உண்ணிகளின் அடையாள அளவை காணல், தாவரங்கள் கணக்கெடுத்தல் போன்றவை பதிவு செய்யப்ப டும். வனத்துறையினர், கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . இந்த ஆண்டு சிறப்பம்சமாக மனித - விலங்கு மோதலை தடுக்கும் வகையில் வனவிலங்குகளுக்கு எங்கெல்லாம் மனித இடையூறுகள் உள்ளன என்பது குறித்து கணக் கெடுத்தல் நடைபெறுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் மனித - விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.