districts

சுவர் இடிந்து மாணவர்கள் பலியான பள்ளிக்கு 3 மாதத்திற்கு முன்பு உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டதா?

திருநெல்வேலி ,டிச. 19- நெல்லை டவுண் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். சம்பவம் நடந்த பள்ளி குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. விபத்து ஏற்பட்ட அன்று நேரில் சென்று ஆய்வு செய்த பலரும் கழிவறை சுவருக்கு அஸ்திவாரம் இல்லை என குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பள்ளிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தான் சுகாதார  சான்று அளித்ததாக தகவல் கள் வெளி யாகி உள்ளது. இந்த சான்றுக்கு தேவை யான உறுதித்தன்மை சான்று. தீயணைப்பு  துறையின் தடையில்லா சான்று போன்ற வையும் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாக நெல்லை மாநகராட்சி சுகாதார பிரிவு வழங்கிய சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இந்த பள்ளிக்கு தீயணைப்பு துறை  சார்பில் தடையில்லாச் சான்று கடந்த ஜனவரி  மாதமும், வருவாய்த் துறை சார்பில் மூன்று வருடம் செல்லுபடியாகும் வகையிலான கட்டிட  சான்றும் கடந்த 2019ம் ஆண்டு வழங்கப் பட்டுள்ளது பல்வேறு துறை சார்ந்த அதிகாரி கள் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப் பட்ட நிலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு 3 மாணவர்கள் உயிரிழந்த சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.