districts

img

வெளியூர்களில் பூமிக்கடியில் புதைவட கம்பி மாற்றம் எப்போது? அமைச்சர் பதில்

சென்னை, மார்ச் 24- தமிழ்நாடு சட்டப் பேரவையில் வெள்ளிக் கிழமை (மார்ச் 24) நடைபெற்ற வினாக்கள் விடைகள் நேர த்தில், மயிலாடுதுறை நகரப்  பகுதியிலுள்ள மின் கம்பி களை பூமிக்கடியில் புதைவட கம்பிகளாக மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?  தேர் ஓடும் வீதியிலும் மின் கம்பிகள் மாற்றி அமைக்கப்படுமா? என்று எஸ். ராஜகுமார், டி.வேல்முருகன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அப்போது, சென்னை மாநகரத்தில் மின் கம்பிகளை புதைவட கேபிள்களாக அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி பெரம்பூர், ஆவடி கோட்டங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது தாம்பரம், அடையார் கோட்டங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஏழு கோட்டங்களில் பணிகளுக்கான மதிப்பீடு அறிக்கை தயார் செய்யப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும், முன்னுரிமை அடிப்படையில் மயிலாடுதுறை நகரப் பகுதி யில் பணிகள் தொடங்கப் படும் என்றார்.  அதேபோல், தேரோடும் வீதிகளில் இருக்கக்கூடிய மின்கம்பி களை புதைவடங்களாக மாற்ற ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி நான்கு கோவில்களில் ஏற்க னவே அந்த பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் அவசர தேவையின் அடிப்படையில் அனைத்து கோவில்களிலும் பணிகள் செய்துத்தரப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.