districts

img

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள்

விருதுநகர், டிச.26- விருதுநகரில் 2150 கட்டு மானத் தொழிலாளர்களுக்கு ரூ.45லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவி களை வருவாய்த்துறை அமைச்சர் வழங்கினார். விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட ரங்கில் மாநில வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்  மைத் துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  கட்டுமானத் தொழிலாளர்கள் 2150 பய னாளிகளுக்கு ரூ.45 லட்சத்து  8 ஆயிரத்து 679 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட ரங்கில் இன்று  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமானம்  மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு பெற்ற கட்டு மானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்  கும் விழா நடைபெற்றது. இதில், கட்டடத் தொழி லில் ஈடுபட்டு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற கொத்தனார்கள், பிளம்பர், தச்சர், வெல்டர், பெயிண்டர்,  எலக்ட்ரீசியன்  உள்ளிட்ட தொழிலாளிகளுக்கு  கல்வி  உதவித் தொகை, திருமணம், இயற்கை மரணம், விபத்து மரணம், பணியிடத்து விபத்து மரணம் உள்ளிட்ட உதவித் தொகைகள் மற்றும்  ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்திற்கான உத்த ரவு   என மொத்தம் 385 பய னாளிகளுக்கு 29 லட்சத்து 74 ஆயிரத்து 100 மதிப்பிலான உதவி நிதிகளையும், 1765 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 34 ஆயிரத்து 579  மதிப்பிலான பாதுகாப்பு உப கரணங்களையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் கட்டு மானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்.குமார், விருதுநகர் ஆட்சி யர் மேகநாத ரெட்டி ஆகி யோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.