districts

img

பள்ளி மாணவர்களை ஈர்க்கும் காவலர்களின் ஆயுத கண்காட்சி

 திருப்பூர், ஜன. 28- 19 ஆவது புத்தகக் கண்காட்சியில், தமிழ்நாடு காவல் துறை சார்பாக அமைத்திருக்கும் ஆயுத கண்காட்சி வெகு வாக கவர்கிறது என்று பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் ட்ரஸ்ட்  இணைந்து நடத்தும் 19 ஆவது புத்தகக் கண்காட்சி ஜன வரி 27 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு  காவல்துறை சார்பாக திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் அமைத்திருக்கும் ஆயுத கண்காட்சி பள்ளி மாணவர்களை வெகுவாக கவர்கிறது என்று பள்ளி மாணவர்கள் தெரிவித் தனர்.  மாவட்ட பயன்பாட்டில் உள்ள பிஸ்டல், கைதுப் பாக்கிகள்,  ரைப்பிள் வகை துப்பாக்கிகள், கிரனைட்டுகள், புகை குண்டுகள் உட்பட இன்னும் பல ஆயுதங்களின் பயன்பா டுகள் குறித்து மாணவர்களுக்கு காவலர்களால் விளக்கம் அளிக்கப்படுகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து  சென்றதாக அங்குள்ள காவலர்கள் தெரிவித்தனர்.  அங்கு வந்த பள்ளி மாணவர்கள் சிலர் தெரிவிக்கையில்,  நாங்கள் இதுவரையில் இந்த ஆயுதங்களை பப்ஜி, பிரீ  பையர் போன்ற கேமிங் தளத்தில் தான் பார்த்திருக்கிறோம். நேரில் அந்த ஆயுதங்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக் கிறது. அதன் பயன்பாடுகள் குறித்து காவலர்கள் சிறப்பாக விளக்கம் அளிக்கிறார்கள். ராணுவத்திடம் மட்டுமே  இந்த  ஆயுதங்கள் இருக்கும் என்று எண்ணியிருந்தோம். ஆனால்  நமது மாவட்ட காவல்துறையிடம் இவ்வளவு ஆயுதங்கள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.