மதுரை, பிப்.27- மதுரை அவினுக்குப் பால் வழங்குவதை நிறுத் தப்போகிறோம் எனத் தமிழ் நாடு பால் உற்பத்தியா ளர்கள் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வெண்மணி சந்திரன், மாவட்டச் செயலாளர் முத் துப்பாண்டி, சுவாமிநாதன் ஆகியோர் திங்களன்று மது ரையில் செய்தியாளர்களி டம் கூறியதாவது:- தமிழக அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோ பர் மாதம் 20-ஆம் தேதி பால் உற்பத்தியாளர் சங்கப் பிரதி நிதிகளை அழைத்துப் பேசி யுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் பால் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திடீரென பால் விலையை உயர்த்துவதா கத் தமிழக அரசு அறிவித் தது. ஆனால் பால் உற்பத்தி யாளர்கள் எதிர்பார்த்த அள விற்கு அதாவது லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்படவில்லை. பசும்பாலுக்கு லிட்டர் ஒன் றுக்கு ரூ.3 உயர்த்தி ரூ.35 ஆகவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 உயர்த்தி ரூ.44 ஆகவும் விலை நிர்ண யிக்கப்பட்டது. ஆனால், “தனியார் நிறு வனங்கள் ஆவின் வழங்கு வதை விட லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை கூடுதலாக வழங்குகிறது. தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தி யாளர்களை நேரடியாகச் சந்தித்து பாலை கொள்முதல் செய்கிறார்கள். தனியார் நிறு வனங்களுக்கு இணையான விலையைத் தமிழக அரசு கொடுக்காததால் பிரதான பால் சங்கங்கள் பாலை கொள் முதல் செய்து அவினுக்கு அனுப்ப முடியவில்லை. இத னால் பிரதம பால் உற்பத்தி யாளர் கூட்டுறவுச் சங்கங்கள் படிப்படியாக மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டி ருக்கின்றன. மதுரை மாவட்டத்தில் 900 சங்கங்கள் மதுரை ஆவி னுக்கு பால் வழங்கிக் கொண் டிருக்கிறது. கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 3.10 லட்சம் லிட்டர் பால் வழங்கப்பட் டது. தற்போது இது 1.38 லட்சமாக வீழ்ந்து விட்டது. ரூ. 7 ஊக்கத் தொகை வழங்கி னால் தனியாருக்குப் பாலை விற்கும் உற்பத்தியாளர்கள் அனைவரும் மீண்டும் அவி னுக்குப் பால் வழங்கு வார்கள். மதுரை ஆவின் தனது வாடிக்கையாளர்களையும், நுகர்வோரையும் தக்க வைத்துக்கொள்ளக் குறைந் தது லிட்டருக்கு ரூ.7 ஊக்கத் தொகை வழங்கவேண்டும். இதையும் மார்ச் 10-ஆம் தேதிக்குள் வழங்க வேண் டும். தவறினால் மார்ச் 11-ஆம் தேதி முதல் ஒன்றி யத்திற்குப் பால் அனுப்பு வது நிறுத்தப்படும். இது தொடர்பான கோரிக்கை மனுவை ஆவின் நிர்வாகத்தி டம் தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க பிரதிநிதிகள் உக்கிர பாண்டி, நடராஜன், பெரிய கருப்பன், சுப்பிரமணி. இன் பம் ஆகியோருடன் இணை ந்து வழங்கியுள்ளோம் என்ற னர்.