districts

மதுரை முக்கிய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து  நீர் திறப்பு 500 கன அடியாக உயர்வு

தேனி, செப்.10- முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதி கரித்து வருவதைத் தொடர்ந்து தண்ணீர் திறப்பு 500 கன  அடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாகச் சாரல்  மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் சீராக  உயர்ந்து வருகிறது. ஞாயிறன்று காலை நிலவரப்படி 119.40 அடி நீர்மட்டம் உள்ளது. 526 கன அடி நீர் வரு கிறது. சனிக்கிழமை வரை 400 கன அடி நீர் திறக்கப் பட்டது. ஞாயிறன்று நீர் திறப்பு 500 கன அடியாக உயர்த்தப்பட்டது. வைகை அணையின் நீர்மட்டம் 47.18  அடியாக உள்ளது. 147 கன அடி நீர் வருகிறது. அணை யிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர்  திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம்  79.01 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.  மழையளவு: பெரியாறு 7, தேக்கடி 0.6, உத்தமபாளை யம் 1, சண்முகா நதி அணை 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

யானைகள் நடமாட்டம்  சுருளி அருவியில் குளிக்கத் தடை

தேனி, செப்.10- சுருளி அருவி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ள தால் சுருளி அருவியில் குளிக்க வனத்துறையினர் இரண்டாம் நாளாகத் தடை விதித்துள்ளனர் . சுருளி அருவிக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் வறட்சி  நிலவி வருகிறது. தண்ணீர் தேடி வன விலங்குகள் இடம்  பெயர்ந்து வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை மீண்டும் யானைகள் கூட்டமாக அருவி பகுதியில் முகா மிட்டது. ஞாயிறன்றும் அதே பகுதியில் யானைகள் இருந்த தால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி அரு விக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. யானைகள் இடம்  பெயர்ந்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறை யினர் தெரிவித்தனர். ஞாயிறன்று விடுமுறை தினம் என்ப தால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கட்டுமானத் தொழிலாளர் பேரவை 

நத்தம், செப்.10- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இந்தியக் கட்டு மான தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியப் பேரவை நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் பிரபாகரன் தலைமையில்  நடைபெற்ற பேரவையில் மாவட்டத் துணைசெயலாளர் போஸ் கலந்துகொண்டார். கூட்டத்தில் புதிய நிர்வாகி கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றியத் தலைவராகச் செல்வம், செயலாளராக குழந்தைவேல், பொருளாள ராகக் கணபதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் துணைத் தலைவர்களாக அன்னராசு, சாந்தி, துணைச் செயலாளர்களாகப் பழனிச்சாமி, ராமன் ஆகி யோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

ரூ.58 கோடியில் கட்டுமானப் பணி  அமைச்சர் தொடங்கி வைத்தார் 

சிவகங்கை, செப்.10-  சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பேரூ ராட்சிக்குட்பட்ட செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூபாய் 58 கோடி  மதிப்பில் பல்வேறு கட்டமைப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை, மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம்  முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஞாயிறன்று தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவை உறுப்பி னர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு வேளாண் பல்க லைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, கானாடுகாத்தான் பேரூ ராட்சித் தலைவர் ராதிகா, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலர் பாபு மற்றும்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரி யர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கழிவுநீர்த் தொட்டியில் எலும்புக்கூடு

சிவகங்கை, செப்.10- கழிவு நீர்த் தொட்டியைச்  சுத்தம் செய்யும் போது  கிடைத்த மனித எலும்புக்கூடு குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பர் தெரு விலுள்ள வீட்டில் ஞாயிறன்று நண்பகல் கழிவுநீர்த் தொட்டி யைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டி ருந்தது.  தொட்டியிலிருந்த  கழிவு நீர் லாரி மூலம் உறிஞ்சி  வெளியே எடுக்கப்பட்டபோது மண்டை ஓடு தண்ணீரில் மிதந்து உள்ளது. இது குறித்து தேவகோட்டை நகர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் பணி தொடர்ந்தது. அப்போது கழிவு நீர்த் தொட்டியிலிருந்து முழு மனித உடல் சட்டை, கைலி மற்றும் ஒரு கண்ணாடி துண்டு ஆகியவை கண்ட றியப்பட்டது.

கத்தியோடு பேருந்தில் ஏறி நடத்துநரை மிரட்டி பணம் பறிப்பு

சிவகங்கை, செப்.10- சிவகங்கையில் அரசுப் பேருந்தில் நடத்துநரிடம் அரி வாளைக் காட்டி முகமூடிக் கொள்ளையர்கள் பணப்பை யைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.  திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள அதிகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (45). அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) சிவ கங்கை கிளை அலுவலகத்தில் நடத்துநராக உள்ளார்.  சம்பவத்தன்று இரவு எட்டு மணிக்குத் திருப்புவனத்தி லிருந்து சிவகங்கை கிளம்பிய 28-ஆம்  நம்பர் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றியுள்ளார். கரும்பா வூர் விலக்கு அருகே இரவு 9:05 மணிக்குப் பேருந்து வந்த  போது இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த  நபர்கள் பேருந்தை வழிமறித்துள்ளனர் பேருந்தில் ஏறி நடத்துநரைக் கத்தியைக் காட்டி மிரட்டி  அவர் வைத்திருந்த பணப்பையைப் பறித்துச் சென்ற னர். நடத்துநர் புகாரின் பேரில் சிவகங்கை காவல்துறை யினர் விசாரிக்கின்றனர். வீரவலசை பகுதியில் பணப்பையிலிருந்த சில்லறை கள் சாலையோரம் சிதறிக் கிடந்துள்ளது சில டிக்கெட்டு களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விஷம் அருந்தி தற்கொலைக்கு  முயற்சிப்பவர்கள் மதுரையில் அதிகரிப்பு

மதுரை, செப்.10-  மதுரை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் விஷ மருந்தி சுமார் 387 பேர் தற்கொலை செய்துகொண்டனர். செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தற்கொலை செய்துகொள்வோர் குறித்த விபரத்தைக் கேட்டுள்ளார். கிடைத்த தகவலில், மதுரை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 4,930 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.  2021-ஆம் ஆண்டு 180 பேர், 2022- ஆம் ஆண்டு 207 பேர் என மொத்தம் 387 பேர் உயிரிழந்துள்ளனர். தற்கொலை முயற்சி செய்பவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி மாவட்டத்தில் லோக் அதாலத் 2342 வழக்குகளுக்குத் தீர்வு

தேனி,செப்.10- தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நடை பெற்ற லோக் அதாலத்தில் 2342 வழக்குகளுக்கு;j தீர்வு  காணப்பட்டது. தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும்  பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும்  போடி சட்டப் பணிகள் சார்பில் சனிக்கிழமை மாவட்டத் தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் லோக் அதா லத் நடைபெற்றது. தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், தேனி முதன்மை மாவட்ட நீதிபதி கணேசன் தலைமை உரையாற்றி தேசிய மக்கள் நீதி மன்றத்தைத் துவக்கி வைத்தார். தேனி மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுரேஷ் வரவேற்றார். குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சரவணன், கூடுதல் மாவட்ட  அமர்வு நீதிபதி கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி  (விரைவு) ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பெரியகுளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு  நீதிபதி மாரியப்பன், நீதித்துறை நடுவர் கமலநாதன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது. உத்தமபாளை யத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி சிவாஜி  செல்லையா, மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்(விரைவு) ரமேஷ், நீதித்துறை நடுவர் ராமநாதன் முன்னிலையில் நடை பெற்றது. ஆண்டிபட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெற்றது. போடியில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமை யியல் நீதிபதி உம்முல் பரிதா, நீதித்துறை நடுவர் வேலு மயில் முன்னிலையில் நடைபெற்றது. தேனி, உத்தம பாளையம் பெரியகுளம், ஆண்டிபட்டி போடிநாயக்க னூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ள வழக்குகள் மற்றும் வங்கிகளில் வரா  கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதி மன்றத்தின் மூலம். 2342 வழக்குகளில் ரூ.17,66,64, 278-க்கு  தீர்வு காணப்பட்டது என தேனி முதன்மை மாவட்ட நீதி பதி கணேசன் தெரிவித்தார்.

மதுரையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

மதுரை, செப். 10-  மதுரையில் ஞாயிறன்று 200 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர். மதுரை- திருநெல்வேலி நான்குவழிச்சாலையில், சீனிவாச காலனிப் பகுதியில் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படையினர் வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது சரக்கு லாரி ஒன்றில் 200 கிலோ கஞ்சா பொட்டலங்களாக;க கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவைக் கடத்தி வந்த மதுரை  மாவட்டம் விக்கிரமங்கலம் செக்கான் கோவில்பட்டி யைச் சேர்ந்த விஜயகுமார், லாரி ஓட்டுநர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த சமில் அஹமது ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் லாரி மற்றும் அவர்கள் வைத்திருந்த கைப்பேசிகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

விருதுநகர், செப்.10- விருதுநகர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை  பறித்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்ற னர். விருதுநகர்  அருகே உள்ளது பொட்டல்பட்டி. இந்தக்  கிராமத்தைச் சேர்ந்த  இராதாகிருஷ்ணன்  மனைவி நாக லட்சுமி(54). இவர்  சம்பவத்தன்று அதிகாலை  வீட்டிலி ருந்து நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாக னத்தில் வந்த  இருவர் நாகலட்சுமியின்  கழுத்திலிருந்த 3.5  பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். அப்போது நிலைதடுமாறி நாகலட்சுமி கீழே விழுந்த  காயமடைந்த  விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சூலக்கரை காவல்துறை யினர் விசாரிக்கின்றனர்.

காயங்களுடன் இறந்து கிடந்தவர் குறித்து விசாரணை

மதுரை, செப்.10- மதுரை தத்தனேரி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர்  ஜவகர் (45). இவர் தத்தனேரி மாநகராட்சி  கழிப்பறை அருகே காது, தலை, மணிக்கட்டு, மார்பு பகுதிகளில் ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைப்பலனின்றி  ஜவகர் உயிரிழந்தார். இது குறித்து  குறித்து அவரது மனைவி மீனா கூடல்புதூர் காவல்துறை யில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

நாளை விருதுநகர், மல்லாங்கிணறில் மின் தடை

விருதுநகர், செப்.10- விருதுநகர் உள்ளரங்கு துணை மின் நிலையத்தில் செப்..12-இல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.  எனவே, அங்கிருந்து மின்சாரம் பெறும்  ராமமூர்த்தி சாலை, அம்பேத்கர் தெரு, கஸ்தூரிபாய் சாலை, ரோசல்பட்டி சாலை, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி சாலை, பாண்டியன்நகர், படடே சாலை, ஏ.ஏ.சாலை, பேராலி சாலை, தந்திமரத்தெரு, கால்நடை மருத்துவமனை சாலை, மெயின் பஜார் வடக்கு, காந்திபுரம் தெரு, மணி நகரம், லிங்க் சாலை, அழகர்சாமி தெரு, காசுக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என மின்வாரியச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதேபோல் மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தி லும்  பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, மல்லாங்கிணறு, நந்திகுண்டு, மேலதுலக்கன்குளம், கெப்பிலிங்கம்பட்டி, வில்லிபத்திரி, நாகம்பட்டி, வலுக்கலொட்டி, அழகியநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறி வித்துள்ளது.

மதுரையில் பாலத்தில் பதுங்கிய மூவர் கைது

மதுரை, செப்.10- மதுரை சாந்திநகரில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த மூன்று பேரை காவல்துறை யினர் கைது செய்தனர். கூடல்புதூர் காவல்துறை சார்பு விஜய குமார். இவர் தலைமையில் காவலர்கள்  ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கூடல்நகர் பாலத்தின் அடியில் சாந்திநகர் வழியாகச் சென்றபோது ஆனையூர் காளி யம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, அழகு  பாண்டி (31), அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற மொடப்பாண்டி (25), ஆனையூர் தெற்கு தெருவை  சண்முக சுந்தரம் என்ற கவட்டை (23) ஆகிய மூவரும் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்தனர்.

“திருக்குறள் முற்றோதல்” மாணவர்களுக்குப் பரிசு

விருதுநகர், செப்.10- திருக்குறள் முற்றோதல் செய்த ஒன்பது மாணவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறையில் “திருக்குறள் முற்றோதல் பாராட்  டுப்பரிசு” எனும் திட்டம் தொடங்  கப்பட்டுள்ளது. இதில், திருக்குற ளில் உள்ளக் கருத்துக்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு ஒழுக்கமிக்கவார் களாக்கும் வகையில் 1,330  குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற வர்களுக்கு ரூ.15 ஆயிரம் வீதம் பரி சும், பாராட்டுச்சான்றிதழும் வழங் கப்பட்டு வருகிறது. இதில் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராசர் மேல்  நிலைப்பள்ளி மாணவி க. வைதேகி, வத்திராயிருப்பு இந்து  மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகநாத், எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ஹரிபிரசாத், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்  பள்ளி மாணவிகள் உமா மகேஸ்வரி, வேல் நாச்சியார் மற்றும் ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வீரச்செல்வி, வேணி, கனகவள்ளி, ஜெகதீஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர் களுக்கு, தமிழக முதல்வர் கை யெழுத்திட்ட பாராட்டுச் சான்றி தழ்கள், ரூ.15 ஆயிரத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சி யர் வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சுசிலா உட்பட, பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஒட்டன்சத்திரத்தில்  செம்மண் கலந்த குடிநீர் விநியோகம்

ஒட்டன்சத்திரம், செப்.11-  ஒட்டன்சத்திரத்தில் செம்மண் கலந்த சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய் யப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட விஸ்வநாதன் நகர், வினோபா நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதி யில் கடந்த மூன்று நாட்களாக வழங்கப் பட்ட குடிநீரில்  செம்மண் கலந்துள்ள நிலை யில் சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்தத் தண்ணீரை அருந்தும் மக்கள்  அனைவருக்கும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட  தொற்று நோய்கள் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம்  இதனை ஆய்வு செய்து மக்களுக்குச் சுகா தாரமான குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் சாதித்தது என்ன? மக்களிடம் அறிக்கையளித்த அமைச்சர்

மதுரை, செப்.10- மதுரை மத்திய தொகுதியில் போட்டி யிட்டு வெற்றி பெற்ற தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது  செயல்பாட்டு அறிக்கையை மக்களிடம் வழங்கினார்.  சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிம்மக்கல் அண்ணாமலை திரை அரங்கம் அருகே திருமலைராயர் படித்துறை, எல்என்பி அக்ரஹாரம், தைக்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் (கடந்த செப்டம்பர்  2022 முதல் மே 2023 வரை) உள்ளிட்ட பகுதி களில் ஆறு மாத காலத்துக்கான தமது செயல்பாட்டு அறிக்கையை வழங்கினார். மேயர் இந்திராணி, மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி உள்ளிட்ட பலர் அவருடன் சென்றனர்.  கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தொகுதி மக்களிடம் அளித்த வாக்குறுதியின்படி சட்டமன்ற உறுப்பினராகத் தனது செயல் பாட்டை ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் தாம் தொகுதி மக்களிடம் சமர்ப்பித்து வருவதாகக் கூறினார். அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டி டங்கள், மாநகராட்சிப் பள்ளிகளில் மாண விகளுக்கு ஓய்வு அறைகள், சமுதாயக்  கூடம் மற்றும் பலவற்றை அவர் திறந்து  வைத்தார். வைகை ஆற்றைச் சுற்றி மதுரை  நகரின் வடக்கு-  தெற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் புதிதாக அமைக்  கப்பட்ட பாலங்களுக்கான திட்டங்களுக்கு அரசிடம் இருந்து நிதி பெறுவதற்கும் அவர்  பங்களித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களில், முதியோர் ஓய்வூதியம் கோரி, விண்ணப்பித்த 1,042  பேருக்கும், 512 பேருக்கு விதவை ஓய்வூதி யம், 48 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி  மற்றும் நிதியல்லாத உதவிகளும் வழங்கப்  பட்டுள்ளது.  சிறப்பு முயற்சியாக, பிளஸ் 2 பொதுத்  தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இலங்கைத் தமிழருக்கு மதுரையில் உள்ள  யாதவா கல்லூரியில் இடம் பெற்றுக கொடுத்ததோடு, உயர்கல்விக்கான செல வைக் கவனித்துக்கொள்வதாகவும். மாநக ராட்சிப் பள்ளிகள் படிப்படியாக மேம் படுத்தப்பட்டு வருகின்றன. குடிநீர் வழங்கு வது மட்டுமின்றி, ஸ்மார்ட் வகுப்பறை களும் கட்டப்பட்டுள்ளன  என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.   எந்த உதவிக்கும் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்த அவர், மஹபூப்பாளையத்தில் உள்ள தனது  அலுவலகம், மதுரையில் உள்ள தனது  இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தி லும் மனுக்களை அளிக்கலாம். 73055-19999  என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோ சனைகள்-புகார்களைத் தெரிவிக்கலாம் என அவர் மேலும் கூறினார்.