திண்டுக்கல் மாவட்டம் பழனி 7வது வார்டில் வார்டு சபா பகுதி கூட்டம் முன்னாள் நகர்மன்ற தலைவர் வேலுமணி, நகர்மன்ற உறுப்பினர் (கவுன்சிலர்) சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் கமலா, நகர் நல அலுவலர் மனோஜ்குமார், நகராட்சி பொறியாளர், கீழரத வீதி ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வார்டில் உள்ள குறைகளை தீர்க்க தீர்மானிக்கப்பட்டது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.