தேனி, அக்.16- நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து தேனி, திண்டுக் கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட் டங்களில் வைகை ஆற்றங் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பர வலாக மழை பெய்து வரு கிறது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப் படும் தண்ணீர், கொட்டகுடி ஆறு மற்றும் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண் ணீர் வரத்து ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து ஞாயிற்றுக் கிழமை காலை 6 மணிக்கு 68.50 அடியாக இருந்தது (மொத்த உயரம் 71 அடி). அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 2,094 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 5,446 மில்லியன் கன அடி. அணையிலிருந்து குடி நீர் திட்டங்களுக்கும் பாசனக் கால்வாய்களிலும் விநாடிக்கு 699 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருவதால் தேனி, திண்டுக் கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட் டங்களுக்கு பொதுப் பணித் துறை சார்பில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வைகை ஆற்றங்கரையோரப் பகுதி களில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற் றைக் கடக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப் பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று பொதுப் பணித்துறை பொறியாளர் கள் எச்சரித்துள்ளனர்.
130 அடியாக உயர்ந்த முல்லைப்பெரியாறு
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் மூலவைகையாறு, கொட் டக்குடி ஆறு, முல்லைப் பெரியாறு, வராகநதி உள் ளிட்ட அனைத்து ஆறுகளி லும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் பெரும் பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. முல்லைப்பெரி யாறு அணையின் நீர்மட்டம் 130.10 அடியாக உள்ளது. அணைக்கு 2530 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உள்ளது. 2094 கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 699 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. 316 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 125.62 அடி யாக உள்ளது.107 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரி யாறு 1, தேக்கடி 3.6, கூட லூர் 12, உத்தமபாளையம் 10.2, வீரபாண்டி 42.3, வைகை அணை 6.2, மஞ்சளாறு 28, சோத்துப்பாறை 42, ஆண்டி பட்டி 20.3, அரண்மனை புதூர் 32.4, போடி 48.2, பெரிய குளம் 20 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.