மதுரை, ஏப்.8- அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் படிக்கும் மாணவர் களுக்கு வேலைவாய்ப்பை உறு திப்படுத்த வேண்டும். பயிற்சி நிலை யங்களுக்கு புதியதாக கூடுதல் இயந்திரங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலு வலர் சங்கத்தின் மாநிலச் செயற் குழு கூட்டம் ஏப்ரல் 8 சனிக்கிழமை யன்று மதுரை கோ.புதூரில் மாநி லத் தலைவர் எம். சீனிவாசன் தலை மையில் நடைபெற்றது. கிளைத் தலைவர் கே. முத்துவேல் முன் னிலை வகித்தார், செயலாளர் மரிய இருதயராஜ் அண்டோ வர வேற்று பேசினார். தலைமை நிலைய செயலாளர் என். சுப்பிர மணியன் துவக்கி வைத்து பேசி னார். மாநில பொதுச் செயலாளர் என். ரமேஷ் வேலை அறிக்கையும், பொருளாளர் என். திருநாவுக்கரசு நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்த னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பொ. பழனியம்மாள், மாவட்ட செயலா ளர் க. நீதி ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் இரா. தமிழ் உள்ளிட்ட தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினார். அரசு ஊழி யர் சங்க மாநிலப் பொதுச் செயலா ளர் ஆ. செல்வம் நிறைவுரையாற்றி னார். சங்கத்தின் மாநில நிர்வாகி எஸ்.நவநீதன் நன்றி கூறினார். கூட்டத்திற்குப் பிறகு மாநிலத் தலைவர் மு.சீனிவாசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: மாநிலம் முழுவதும் 101 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. 350 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் தொழிற்பயிற்சி படிப்பு முடித்துச் செல்கிறார்கள். அரசுத் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள பெரும்பாலான இயந்திரங்கள் மிக வும் பழமையானது. நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய நவீன இயந் திரங்கள் வாங்க நிதி ஒதுக்க வேண்டும்
கோயம்புத்தூரில் பம்ப், மோட் டார் தயாரிப்பு அதிகம் நடைபெறு கிறது. ஆனால் இங்குள்ள தொழிற் பயிற்சி நிலையத்தில் மோல்டர் பிரிவு மூடப்பட்டுவிட்டது. தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு ஓவியம், கணிதம் இரண்டும் முக்கியமானவை. கிட் டத்தட்ட இந்த இரண்டு பாடங்களும் தற்போது இல்லை என்றாகிவிட் டது. கணிதமும் படம் வரையும் திற னும் ஒரு மாணவருக்கு அவசியம். இது தெரியாமல் எப்படி பயிற்சியா ளரால் ஒரு இயந்திரத்தின் உதிரி பாகங்களைத் தயாரிக்க முடியும். கணிதம், ஓவியத்தை கட்டாயம் கொண்டுவர வேண்டும். தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் செல்லும் மாணவர்களில் ஒரு சதவீதம் பேருக்குக் கூட நிரந்தர வேலையில்லை. இதற்குக் கார ணம் ஒன்றிய அரசின் பொருளாதா ரக் கொள்கைகள் தான், “அமர்த்து; துரத்து” என்ற நிலையில் தொழிற் பயிற்சி மாணவர்கள் உள்ளனர் . மாநிலத்தில் உள்ள 101 தொழிற் பயிற்சி நிலையங்களில் 64 நிலை யங்களுக்கு முதல்வர்கள் இல்லை. பயிற்சி நிலையங்களில் உதவியா ளர்கள் பணியிடம் 90 சதவீதம் காலி யாக உள்ளது. உதவி பயிற்சி அலு வலர், இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடங்கள் 40 சதவீதம் காலி யாக உள்ளது. அரசு மற்றும் தனி யார் துறை பங்களிப்புடன் 132 ஊழி யர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் பத்தாண்டுகளாக நிரந்த ரப்படுத்தப்படாமல் உள்ளனர். அவர்களை நிரந்தரம் செய்ய வேண் டும்.
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கப்பட்ட போது (1956-61) காலத்தில் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் தொழிற் பயிற்சி நிலையங்கள். தொழிற் பயிற்சித்துறை தற்போது பதி வேடுகள் பராமரிப்புத்துறையாக மாறி வருகிறது. தமிழக அரசு கிராமப்புற மாண வர்கள் நலன்கருதி தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அனைத்துப் பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண் டும். இவ்வாறு அவர் கூறினார். பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் திறம்பட செயல்பட்டு இந்த நாட் டின் தொழில்வளர்ச்சிக்கான தொழிலாளர்களை உருவாக்கிடும் சான்றிதழ்தாரர்களுக்கு பிற மாநி லங்களில் வழங்குவது போல முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணிபுரி யும் பயிற்சியற்ற தொழிலாளர் கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள ஐடிஐகளின் மூன்றாம் பணிமுறை அமல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இத்திட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் மூன்றாம் பணிமுறையை அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களிலும் , ஒவ் வொரு பிரிவுகளில் முதலாவதாக தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மேற்கண்ட பயிற்சியாளர்களுக்கு சிஐடிஎஸ் (CITS) பயிற்சியளித்திட ஆவன செய்திட வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஜூனில் மண்டல அளவில் உண்ணாவிரதம் ஒன்றிய அமைச்சர், டிஜிடி இயக்குனர், தமிழ்நாடு முதலமைச் சர், அமைச்சர் ஆகியோருக்கு மே மாதத்தில் கிளைகள் மூலம் கோரிக்கை கடிதம் அனுப்புவது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூன் மாதத்தில் மண் டல அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது. ஜாக்டோ- ஜியோ இயக்க நடவடிக்கைகளில் அனைவரும் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.