districts

img

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்றுக!

காரியாபட்டி, ஜூலை 27- சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு தனி சிறப்பு  சட்டத்தை இயற்றிட வேண்டும். பட்டியலின  மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர், கழிப்பி டம், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு 100 நாள் வேலையை மறுக்காமல் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் விருதுநகர் மாவட்ட 4 வது மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. காரியாபட்டி பேரூராட்சி திருமண மண்ட பத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எம்.சி. பாண்டியன் தலைமை தாங்கினார். வர வேற்புக்குழு செயலாளர் ஏ.அம்மாசி வர வேற்புரையாற்றினார். துவக்கி வைத்து மாநில துணைச் செயலாளர் என்.கலை யரசன் பேசினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார் சமர்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே. அர்ஜூனன், சமூக ஆர்வலர் எம்.ஊர்காவ லன், ஆதி தமிழர் கட்சியின் விருதை வசந்  தன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜெயபாண்டி, தேவேந்திரர் சமூக பாது காப்பு கூட்டமைப்பின் சாலமன், தலித் விடு தலை இயக்கத்தின் பீமாராவ், திராவிடர் தமிழர் கட்சியின் ஆதிவீரன் ஆகியோர் பேசி னர். மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு சிறப்புரையாற்றினார். முடிவில் வரவேற் புக்குழு தலைவர் பி.மலைச்சாமி நன்றி கூறி னார். புதிய நிர்வாகிகள் தேர்வு : மாவட்டத் தலைவராக எம்.முத்துக்குமார், செயலா ளராக கே.முருகன், பொருளாளராக எம். சுப்புராம் ஆகியோர் உட்பட 44 பேர்  கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்  டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.