விருதுநகர், நவ.14- விருதுநகரில் 30 ஆண்டு களாக செயல்படாமல் உள்ள புதிய பேருந்து நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைநகரான விருதுநகரில் உள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த 1992-ஆம் ஆண்டு திறக்கப் பட்டது. பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் புறநகர் பேருந்துகள் அனைத் தும் இங்கிருந்தும், நகரப் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்பட்டு செயல்பட்டு வந் தன. இந்தநிலையில், பல் வேறு காரணங்களால் இப் பேருந்து நிலையம் தொட ர்ந்து செயல்படவில்லை. இதையடுத்து, கடந்த 2011-12 இல் பைபாஸ் ரைடர் பேருந்து கள் மற்றும் தொலைதூரப் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத் திற்கு வந்து சென்றன. இங் கிருந்து, விருதுநகர்-சென்னை, விருதுநகர்-பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களுக்கும் பேருந்து சேவை தொடங்கப்பட்டதால், மக் கள் மிகுந்த மகிழ்ச்சியடைந் தனர். நாளடைவில், புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற பேருந்துகள் அனைத்தும் படிப்படியாக குறைக்கப்பட்டு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
இரவு நேரங்களில் விருதுநக ருக்குள் தொலைதூரப் பேருந்துகள் வருவதில்லை. இதனால், மக்கள் பாதிக் கப்பட்டு வருகின்றனர். எனவே, மதுரை-திரு நெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி வரை செல் லும் பைபாஸ்-ரைடர் பேருந்து கள், தொலை தூரப் பேருந்து கள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும். ஆம்னிப் பேருந்துகள் அனை த்தையும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும். விருதுநகரில் இருந்து புறப்படும் தொலைதூரப் பேருந்துகளான இராமேஸ் வரம், திருச்செந்தூர் உள் ளிட்ட பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். விருதுநகர் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த சென்னை உள்ளிட்ட தொலைதூரப் பேருந்து களுக்கான முன் பதிவு மையத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக் குமார் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர்கள் எஸ்.பாலசுப்பிரமணியன், தேனி வசந்தன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்து வேலு, நகர் செயலாளர் எல். முருகன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எம்.முத்துக் குமார், மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம்.ஜெயபாரத், என்.உமாமகேஸ்வரி, ஐ. ஜெயா, ராஜேஸ்வரி ஆகி யோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.