districts

துறை அதிகாரிகளும் போலீசாரும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

மதுரை, ஜூன் 29-  தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்  களை நிறுத்தி, வாகன நிறுத்திமிடம் போல்  பயன்படுத்தினால் அதிகாரிகளும் போக்கு வரத்து போலீசாரும்தான் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  மாவட்ட ஆட்சியருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரி வித்துள்ளது.  மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்  பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை பைபாஸ் சாலையில் ஒரு உணவகத்தின் அருகே உள்ள தேசிய  நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்  பட்டு, வாகன நிறுத்தம் போல் பயன் படுத்துகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்  சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதனை அகற்ற உத்தரவிட வேண்  டும் என கடந்த 2017ஆம் ஆண்டு மனு தாக்  கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  தேசிய நெடுஞ்சாலையில் வாகன நிறுத்தம் போல் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தர விட்டனர். இந்த நிலையில் இந்த நீதிமன்ற உத்த ரவை பின்பற்றாத மாநகராட்சி ஆணையர்  மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந் தார்.  இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி  அமர்வு முன்பு வியாழனன்று நடைபெற் றது. அப்போது நீதிபதிகள், உயர்நீதிமன் றம் ஏற்கனவே பல உத்தரவு பிறப்பித் துள்ளது. மக்கள் பயன்பாட்டில் உள்ள  பொது இடங்களை வாகன நிறுத்தமாக பயன்படுத்தக் கூடாது என்று உத்தர விட்டுள்ளது. தற்பொழுது தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தி, வாகன நிறுத்தம்  போல் பயன்படுத்துகின்றனர் என்பது குற்றசாட்டு. இது குறித்து தேசிய நெடுஞ் சாலை அதிகாரிகளும், தொடர்புடைய போக்குவரத்து போலீசாரும்தான் கண்கா ணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இவர்களுக்குத்தான் அதி காரம் உள்ளது.  எனவே தேசிய நெடுஞ்சாலையில் வாக னங்கள் நிறுத்துவோர் மீது, கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி யருக்கும்,  மாநகராட்சி ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என்பது ஏற்புடை யது அல்ல என கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.