வீறு கவியரசர் முடியரசனார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வினை முன்னிட்டு, காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் டிசம்பர் 5 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , “வீறு கவி முடியரசனாரின் படைப்பியல் திறன்” நூலினை வெளியிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, பாரி முடியரசன், கவிதைப்பித்தன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் க.ரவி, காரைக்குடி நகர்மன்றத் தலைவர் சே.முத்துத்துரை, நகர்மன்றத் துணைத்தலைவர் நா.குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.