தேனி, மே 4- வீரபாண்டி கெளமாரி யம்மன் கோயில் திருவிழா வை முன்னிட்டு அங்கு அமைக்கப்படும் ராட்டினம் ,தற்காலிக கடைகள் மற்றும் பணியாளர்களுக்கு காப்பீடு அவசியம் என மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார் . தேனி மாவட்டம், வீர பாண்டியில் கௌமாரியம் மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெற வுள்ளதை யொட்டி, இராட்டி னங்கள் அமைக்கப்பட வுள்ள இடங்கள், தற்காலிக பேருந்து நிறுத்தம், தற்கா லிக இரு சக்கர, நான்கு சக் கர வாகனங்கள் நிறுத்துமி டம், தற்காலிக கழிப்பறை உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா ஆய்வு மேற் கொண்டார். வீரபாண்டியில் தற் காலிக பேருந்து நிலையம், இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப் பட்டு வருகிறது. பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக் கப்படவும், அனைத்து முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்க ளில் அதிகமான அளவு மின் விளக்குகளை அமைத்திட வும், தற்காலிக கழிவறைகள் தேவையான அளவு ஆங் காங்கே அமைத்திட உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்க ளுடன் அமைக்கப்படவுள்ள இராட்டினங்கள் மற்றும் பணி யாளர்கள், தற்காலிக கடை கள் அனைத்திற்கும் காப்பீடு செய்திருக்க வேண்டும். மேலும், அரசின் விதிமுறை களுக்குட்பட்டு இராட்டி னங்கள் அமைக்கப்பட்ட பின்னரே இராட்டினங்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கிட அறிவுரை வழங் கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் . இந்த ஆய்வின் போது, செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் சு.ஜெகவீரபாண்டி யன், வீரபாண்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கீதா சசி, செயல் அலுவலர் ஆறுமுக நயினார் உட்பட சம்பந் தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.