சின்னாளப்பட்டி, டிச.9- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஊராட்சி ஒன்றி யககுழுத்தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் இந்தி ராணி, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலை வர் முத்து முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் உதயகுமார் வர வேற்றார்.இளநிலை உதவியாளர் முனி யாண்டி தீர்மான அறிக்கை வாசித்தார்.வத்த லக்குண்டு ஊராட்சி ஒன்றியத்தில் கட்ட காமன்பட்டியிலும்,நடகோட்டை ஊராட்சி வத்தல்பட்டியிலும் தலா ரூ. 8 லட்சத்தி 50 ஆயிரம் வீதம் மொத்தம் 17 லட்சத்தில் 2 நாடக மேடைகள் கட்டுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாராஜன் நன்றி கூறினார்.