சிவகங்கை,டிச.17- சிவகங்கை நகரில் கருணை வள்ளலார் 200-வது முப்பெரும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடை பெற்றது.கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற 45 மாணாக்கர்களுக்கு சான்றிதழ் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய நூல்களை வழங்கிப்பேசினார். இவ்விழாவின் ஒருபகுதியாக பள்ளி மாணாக்கர்கள் மற்றும் சன்மார்க்கிகளைக் கொண்ட சன்மார்க்க பேரணியானது சிவகங்கை பேருந்துநிலையத்தில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது. வள்ளலாரின் கொள்கைகளை வலியுறுத்தும் தலைப்புகளிலான, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி மற்றும் கவிதைப் போட்டிகள் மன்னர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மொத்தம் 177 கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் பங்குபெற்ற 6 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளில் வெற்றி பெற்ற மொத்தம் 45 மாணாக்கர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வள்ளவாரின் போத னைகள் அடங்கிய நூல்கள் வழங்கப்பட்டன. வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மூத்த சன்மார்க்கிகள் 12 நபர்களுக்கு வெள்ளி டாலர்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஞானப்பிரகாச தேசிக சுவாமி கள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழ னிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ்,காஞ்சிரங்கால் ஊரட்சிமன்ற தலைவர் மணிமுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.