districts

img

அச்சம்தவிர்த்தான் கல்குவாரியில் மான்ராஜ் எம்எல்ஏ ஆய்வு

திருவில்லிபுத்தூர்,ஜுன் 9- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் பகுதி யில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக அமைக்கப் பட்டுள்ள கல் குவாரியில், திருவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ் வியாழக்கிழமை அன்று ஆய்வு செய்தார். கல் குவாரி அமைக்கப் பட்டதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றிய செயலா ளர் சசிகுமார் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து பல்வேறு போ ராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். கல் குவாரியால் விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. வழக்கு நிலுவை யில் இருந்த போதும் கல் குவாரி நிர்வாகம் ஆயத்த பணிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறது. வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் இதனை கண்டுகொள்ளாத போக்கு என்பது தொடர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் 27ஆம் தேதி கந்தர்வ கோட்டை சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கல்குவாரியை ஆய்வு செய்துவிட்டு சென்றார் தொடர்ந்து திருவில்லி புத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் கிரசர் மற்றும் குவாரியை ஆய்வு செய்ததோடு அருகிலுள்ள நரையங்குளம் வடக்கு அச்சம் தவிர்த்தான் அச்சம் தவிர்த்தான் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம்  குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம மக்க ளும் விவசாயிகளும் நீதி மன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ளதால் கல் குவா ரியில் எந்த பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது,

மேலும் குடிநீர் ஆதாரம் கல்குவாரி கிரஷர் இயங்குவதால் கடுமையாக பாதிக்கப்படும். கிரஷர் மற்றும் கல் குவாரியில் இருந்து வரும் தூசியால் ஆஸ்துமா மற்றும் நுரை யீரல் புற்றுநோய் உருவாவ தற்கு வாய்ப்பு உள்ளது. தங்களது சொந்த நிலத்தி ற்கு செல்ல முடியாமல் சுற்றிலும் வேலி போட்டு மறைத்து வைத்துள்ளனர் என்று கூறினர் நிரந்தர மாக கிரஷர் மற்றும் கல்குவா ரியை மூடுவதற்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  பின்னர் சட்டமன்ற உறுப்பி னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு விஷ யமாக இருந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் .தனியார் நிறு வனம் அமைத்துள்ள கிரஷர் மற்றும் கல்குவாரி இடத்தை ஒட்டி விவசாயி களுக்கான நிலம் உள்ளது ஆனால் விவசாயிகள் செல்ல முடியாத அளவிற்கு அந்த இடத்தை நிறுவனம் ஆக்கிரப்பு செய்துள்ளது கிரஷர் கல்குவாரி இயங்க ஆரம்பித்தால் மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தலை யிட்டு உடனடியாக கிரஷர் கல்குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சுற்றுவட்ட கிராம மக்களை திரட்டி என்னுடைய தலை மையில் மிகப்பெரிய போ ராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். ஆய்வின்போது  மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி மான்ராஜ் .பிள்ளை யாரத்தம் ஊராட்சி மன்ற தலைவர் காசி ,சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசி குமார், சிபிஐ நிர்வாகி கணே சன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.