சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் தெற்கு வண்டல் கிராமத்தில் ஊரணி அமைப்பதற்காக 1.80ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கிய 23 வெளிநாடு வாழ் இந்தியர்களை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி பாராட்டினார். பிரதான் தொண்டு நிறுவனம் 60 மீ நீளம் 56 மீட்டர் அகலம் 2 மீட்டர் உயரத்திற்க்கு ஊரணி அமைத்துக் கொடுத்துள்ளனர். கிராம மக்கள் ரூ2.85 லட்சம் வழங்கி உள்ளனர்.