காரியாபட்டி, ஜூன்.21- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஆவி யூரில் தலித் மக்களுக்கு கடை களில் பொருட்கள் வழங்காமல் சமூக பகிஷ்காரம் செய்த தக வலறிந்து உடனடியாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். காரியாபட்டி அருகே உள்ளது ஆவியூர். இங்கு அருந்ததியர் சமூ கத்தைச் சேர்ந்த 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன்,9,10 ஆகிய தேதிகளில் பொங்கல் திருவிழா நடத்த முடிவு செய்ததோடு, அதில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சிக்கும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், காவல்துறையினரோ, திருவிழா நடத்த மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர். மேலும், முளைப்பாரியை ஊருக்கு பொது வான கண்மாயில் கரைக்க அனுமதி கிடையாது எனவும், முளைப்பாரி ஊர்வலம் நடத்த சாதி ஆதிக்க சக்தியினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கடிதம் வழங்கி யுள்ளனர். மேலும், முளைப்பாரிகளை தலித் மக்கள் குடியிருப்பு அருகே உள்ள கிணற்றில் கரைக்க வேண் டும் என காவல்துறையினர் கட் டாயப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில், சாதி ஆதிக்க சக்தியினர், தீண்டாமை மனோபாவத்தோடு, தலித் மக்க ளுக்கு தங்களுடைய கடை களில் பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்கத் தடை விதித்தனர். இதனால், தலித் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள் ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே.முரு கன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். லட்சுமி, மாவட்டக்குழு உறுப்பி னர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்ட செயலா ளர் ஏ.அம்மாசி, வட்டக்குழு உறுப்பினர் முகமது அலி ஜின்னா, குமராண்டி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்பு, தலித் மக்களை நேரில் சந்தித்து தங்களது ஆத ரவை தெரிவித்தனர். இந்தநிலை யில், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஊர் மக்கள் புகார் அளித்த னர். இந்த புகாரின் பேரில், வட்டாட்சியர் தலைமையிலான அரசு அதிகாரிகள் தலையீட்டால் கடைகளில் பொருட்கள் வழங் கப்பட்டது.