திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த 29 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. விழுப்பனூர் கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் மல்லி ஆறுமுகம் கலந்து கொண்டார். அயன் நாச்சியார் கோயில் மற்றும் மல்லி கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மண்டல அலுவலர் நாகரத்தினம், ஆணையாளர் சிவகுமார் ,வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பசுமை கிராம சபையை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.