districts

img

துணை மேயர், சிபிஎம் முயற்சியால் 973 பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை

மதுரை, ஏப்.15-   மதுரை மாநகராட்சி துணை மேயர் டி நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சி மற்றும் ஆலோசனையால் மாநக ராட்சிக்குட்பட்ட 78, 79, 81, 82, 83 ஆகிய வார்டுகளில் வசிக்கும் 973 நபர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களை முறைப்படுத்தி பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை கள் இறுதி கட்டத்தை எட்டியுள் ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்  பட்ட சோலை அழகுபுரம் பகுதியில்  சர்வே எண் 411/1 இல் உள்ள இடத்தை 1993 ஆம் ஆண்டு தமிழ்  நாடு வீட்டு வசதி வாரியம் தனது பயன்பாட்டிற்காக எடுத்துக் கொண்டது. வீட்டு வசதி வாரியம்  எடுத்துக்கொண்டபோக எஞ்சி யுள்ள இடமான ( சோலை அழகு  புரம், பாரதியார் ரோடு, ராமய்யா வீதி, ஜீவா நகர், அம்பேத்கார் நகர்)  சுமார் 15. 4 ஏக்கர் நிலத்தில்  மக்கள்,  மதுரை மாநகராட்சியின் மூலம் வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளுடன் வரி செலுத்தி வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டு வசதி வாரி யத்தின் சொந்த இடத்தில் 30 ஆண்டு களுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள் தங்களுக்கு  பட்டா வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  

இந்த கோரிக்கையின் மீது தனிக் கவனம் செலுத்தி வரும் துணை மேயர் டி.நாகராஜன், மதுரை மாவட்ட  நிர்வாகம் மற்றும்  சென்னையில் உள்ள நில நிர்வாக துறை ஆணை யர் ஆகியோரை நேரில் சந்தித்து  கோரிக்கை குறித்து வலியுறுத்தினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக குடி யிருந்து வரும் மக்களுக்கு அன்  றைய சந்தை மதிப்பீட்டின் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்து  அந்தத் தொகையை 973 நபர்களி டமிருந்து பெற்றுக் கொண்டு அவர் களுக்கு பட்டா வழங்கவேண்டும் என துணை மேயர் டி. நாகராஜன் வலியுறுத்தினார்.  இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ்ஸ்சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் முன் மொழிவு ஒன்றை தயார் செய் துள்ளனர். இந்த நிலையில் வியாழனன்று  மதுரை மாவட்ட வருவாய் அலுவ லர் சக்திவேல், துணை மேயர் டி.  நாகராஜன் ஆகியோர் 973 நபர்கள் குடியிருக்கும் பகுதியை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், பகுதிக்குழு உறுப்பினர் குரோனி செந்தில் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த ஆய்வு குறித்து செய்தி யாளர்களிடம் பேசிய துணை மேயர் டி.நாகராஜன், பட்டா வழங்கும் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி  விட்டது. விரைவில் அவர்களுக்கு பட்டா கிடைக்கும் என்று கூறி னார்.