விருதுநகர், மே 21- விருதுநகர் சந்தையில் உளுந்தம் பருப்பு, பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். விருதுநகர் சந்தையில் அத்தி யாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளி யிடப்பட்டு வருகிறது. அதன் விபரம் வருமாறு: கடந்த வாரம் 15 கிலோ கடலை எண்ணெய் ரூ.3100க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.100 மட்டும் குறைந்து தற்போது டின் ஒன்று ரூ.3ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. பாமாயில் விலையானது கடந்த வாரம் 15 கிலோ ரூ.1520 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இத்ந வாரம் ரூ.45 குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.1475க்கு விற்கப்பட்டு வருகிறது. வத்தல் விலை உயர்வு குண்டூர் வத்தல் ஏ.சி. விலையானது கடந்த வாரம் குவிண்டால் ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் 22 ஆயிரம் வரை விற் கப்பட்டது. இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால் ரூ.25ஆயி ரம் முதல் 27 ஆயிரம் வரை விற்பனை யாகிறது. கடந்த வாரம் துவரம் பருப்பு புதுஸ் நாடு வகையானது குவிண்டால் ஒன்று ரூ.11,200க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்று ரூ.13 ஆயிரமாக உயர்ந்து, தற்போது ரூ.12500-க்கு விற்பனை செய்யப்படு கிறது. பாசிப் பருப்பு கடந்த வாரம் ரூ. 10,100க்கு விற்கப்பட்டு வந்தது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனால் குவிண்டால் ஒன்று ரூ.10,300க்கு விற்கப்படுகிறது. பாசிப் பயறின் விலை கடந்த வாரம் 100 கிலோ ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 வரை உயர்ந்து தற்போது ரூ.8300க்கு விற்பனையா கிறது. பட்டாணி பருப்பு இந்தியா 100 கிலோ கடந்த வாரம் ரூ.5600க்கு விற்பனை யானது. இந்த வாரம் ரூ.100 உயர்ந்து தற்போது ரூ.5700 என விற்பனை யாகிறது. உளுந்து ( நாடு) 100 கிலோ ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப் பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயர்ந்து தற்போது ரூ.8300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் உளுந்து (லயன் ) வகை 100 கிலோ ரூ.300 உயர்ந்து தற்போது 8,300க்கு விற்கப்படுகிறது. பிற உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.