districts

மதுரை முக்கிய செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி: வெளிநாட்டவர் உட்பட இருவர் கைது

திருநெல்வேலி, டிச. 4- நெல்லை  மாவட்டம், மணிமுத்தாறு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த தளவாய் வாட்சப் எண்ணிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உயர் அதிகாரி அனுப்புவதுபோல் பரிசு கூப்பன் அனுப்பச் சொல்லி செய்தி அனுப்பப்பட்டு, அதன் மூலம் ரூ.7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.  இது சம்பந்தமாக திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது.  தென்மண்டல காவல் துறைத் தலைவர் மற்றும் நெல்லை சரக காவல் துறை துணைத் தலைவர் உத்த ரவின் பேரில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மேற்பார்வையில் இவ்வழக்கின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப் பட்டு, ஆய்வாளர்கள் ராஜ், சந்திரமோகன், உதவி ஆய்வா ளர் ராஜரத்தினம்,ஆகியோர் விசாரணை மேற்கொண்ட னர்.  விசாரணையில் கடந்த 23.08.2022ம் தேதி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட ஆந்திரா, சித்தூரைச் சேர்ந்த முரளி(41) மற்றும் வினய்குமார்(35)ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர் இந்நிலையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு வழக்கிலும், இவ்வழக்கிலும் ஒரே மாதிரியாக மோசடி நடைபெற்றுள் ளது தெரியவந்ததால் அவ்வழக்கில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் ஆவணங்களையும் பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டதில் மணிப்பூர் மாநி லத்தைச் சேர்ந்த ராம்சன்சோகாசர் (32) மற்றும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி(40) ஆகியோர் பெங்களூ ரில் இருந்து இம்மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததால், ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை யினர் பெங்களூர் சென்று இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும்  ஏடிஎம் கார்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து நிறுவனம் மீது ரூ.400 கோடி மோசடி புகார்  35 வாகனங்கள் பறிமுதல்

தஞ்சாவூர், டிச.4 -  தஞ்சாவூர் ரஹ்மான் நகரைச் சேர்ந்த வர் கமாலுதீன். இவர் தஞ்சாவூர், அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதியில் தனியார் பேருந்து நிறுவனத்தை  நடத்தி வந்தார். மேலும் சென்னை உள்ளிட்ட  பல்வேறு நகரங்களுக்கு ஆம்னி பேருந்தை இயக்கி வந்தார். இந்த தனியார் பேருந்து நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும்ஈவுத்தொகை வழங்குவ தாக கமாலுதீன் அறிவித்தார். அதன்படி இந்நிறுவ னத்தில் ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இதற்கிடையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கமாலுதீன் இறந்துவிட்டார். மேலும், பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஈவுத்தொகை உள்ளிட்ட முதலீடு தொகை ஏதும் திருப்பி வழங்கவில்லை.  இதனால், பேருந்து நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து தனியார் பேருந்து நிறுவனம் ரூ.400 கோடி வரை மோசடி செய்ததாக இதுவரை 6,380 பேர் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் இந்நிறுவனத்துக்கு சொந்தமான மற்றும் கமாலுதீன், அவ ரது குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்ட 154 வாகனங்களில் இதுவரை 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  மேலும் 119 வாகனங்களை பறிமுதல்  செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளியின் கதவுகள் திருட்டு

கும்பகோணம், டிச.4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே சுவாமிமலை காவல் சரகம் சுந்தரப்பெருமாள் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யின் கதவுகள் திருடப்பட்டுள்ளன. இங்கு இருந்த 17 இரும்பு கதவு கள் திருடப்பட்டது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சுவாமி மலை காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். இந்நிலையில், சந்தோஷ் (21), அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(24) ஆகிய இருவரும் சேர்ந்து பள்ளியில் 17 இரும்பு கதவு களைதிருடியது தெரிய வந்தது. இரு வரையும் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

பயிர்க்கடன் தொகையை வங்கியில் செலுத்துக! விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பாபநாசம், டிச.4 - திருஆரூரான் சர்க்கரை ஆலை முறைகேடாக விவ சாயிகள் பெயரில் பெற்ற ரூ.300 கோடி வங்கி கடனைத்  தீர்க்க வேண்டும். விவசாயி களின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பயிர்க் கடன் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும். ஒன்றிய, மாநில  அரசுகள் அறிவித்த கரும் பிற்கான முழுத் தொகை மற்றும் 5ஏ தொகை முழு வதையும் வட்டியுடன் ஒரே  தவணையில் விவசாயி களுக்கு வழங்க வேண்டும்.  வெட்டுக் கூலி, வாகன வாடகை முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணை யில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்  சார்பில் கபிஸ்தலம் அருகே  திருமண்டங்குடி திருஆரூ ரான் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. 

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் : பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாதுகாப்பு

நாகர்கோவில், டிச. 4- செவ்வாயன்று (டிச.6) பாபர் மசூதி இடிப்பு தினத்தை யொட்டி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதியை சங்கபரிவார் இடித்த நாளான டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு  உள்ளது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதையொட்டி கன்னியா குமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திரு வள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையின் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி காந்தி மண்டபம், பகவதி அம்மன் கோவிலிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படு கிறார்கள். இதுபோல், கன்னியாகுமரி ரெயில் நிலையம், பேருந்து நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரைப்பகுதி போன்ற முக்கியமான இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஆய்வாளர் நவீன் தலைமையில் குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் தீவிர மாக கண்காணித்து வருகிறார்கள். படகு மூலமும் கடல் வழியாகவும் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார் கள். கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்த மான சோதனை சாவடிகளில் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரும் தங்கி இருக்கிறார்களா? என்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

நெல்லையில் கிராம உதவியாளர்கள் தேர்வு :  3,342 பேர் எழுதினர்

திருநெல்வேலி, டிச. 4- வருவாய் துறையில் காலியாக உள்ள 60கிராம உதவி யாளர்கள் பணி யிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக் கிழமை எழுத்து தேர்வு நெல்லை மாவட்டத்தில் 8 மையங்க ளில் நடைபெற்றது.  நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை ஆகிய 8 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடை பெற்ற தேர்வை எழுத மொத்தம் 4,390 பேர் விண்ணப்பித்தி ருந்தனர். அதன்படி ஞாயிறன்று நடைபெற்ற தேர்வை  3,342 பேர்  எழுதினர். இது 76.12 சதவீதமாகும் 1,048 பேர் தேர்வு எழுத வரவில்லை. கிராம உதவியாளர் எழுத்து தேர்வினையொட்டி தேர்வு மையங்களுக்கு காலை 9.30 மணிக்குள் தேர்வர்கள் வரவேண்டும் என அறிவிக்கப் பட்டிருந்தது. தாமதமாக வந்தவர்களை தேர்வு எழுத அனு மதிக்க வில்லை. மேலும் தேர்வு மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்க ளையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கபடவில்லை. எழுத்து தேர்வினை யொட்டி அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை

திருநெல்வேலி, டிச. 4- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்க ளாக பருவமழை தொடர்ந்து பெய்து வரு கிறது. மூலைக் கரைப்பட்டி மற்றும்  நெல்லை மாநகர பகுதிகள் மற்றும் பாளையில் பரவலாக மழை பெய்தது.  இதேபோல நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பா சமுத்தி ரம், பாபநாசம், சேர்வலாறு உள்ளிட்ட இடங்களிலும் மழை  பெய்தது. இதேபோல தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, ஆய்க்குடி, கடனாநதி, ராமநதி, சங்கரன் கோவில், சிவகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. அதிகபட்ச மாக மூலைக் கரைப்பட்டி பகுதியில் 35 மில்லி மீட்டர் மழை பெய்தது.  மற்ற இடங்களில் பெய்த மழை  அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு: பாளை-19, நெல்லை-8, சேர்வலாறு-6, பாபநாசம்-6, மணிமுத்தாறு-2.4, கன்னடியன்-5.8, சேரன்மகா தேவி-1.6, களக்காடு-10.4, செங்கோட்டை-3.4, ஆய்க்குடி-1, அம்பை-10, ராதா புரம்-4.4, நாங்குநேரி-10, கடனாநதி-10, ராமநதி-2.2, கருப்பா நதி-10, குண்டாறு-4.2, கொடுமுடியாறு-22, அடவிநயினார்-3,  சங்க ரன்கோவில்-1, சிவகிரி-1 என பதிவாகியிருந்தது.

தூய்மை பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: மேயர் வேண்டுகோள்!

தூத்துக்குடி,  டிச. 4 தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடை பெறும் கழிவுநீா்க் கால்வாய், மழைநீா் வடிகால் பணிகளை மேயா் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி குறிஞ்சி நகா் பகுதியில் மழைநீா் வடி கால் அமைக்கும் பணியை மேயா் ஜெகன் பெரியசாமி நேற்று ஆய்வு செய்தா ர். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள குப்பைகள், கழிவுகளை கால்வாய்களில் கொட்டு வது தொடா்கிறது. இதனால், மாநகராட்சிக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய செயலை பொதுமக்கள் கைவிட வேண்டும். தூய்மையான மாநகராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

பாம்பு கடித்து பெண் பரிதாப சாவு

தூத்துக்குடி,  டிச. 4 கொப்பம்பட்டி அருகே தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு  கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி அருகில் உள்ள வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பகவதி (60), சனியன்று தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். விசாரணை நடத்தி வருகிறார்.

முத்து நகரின் முதல் போராளியின் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி,  டிச. 4 முத்துக்குளித்துறையின் 16ஆவது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டிய னின் 269 ஆவது பிறந்தநாள் விழா தூத்துக் குடியில் கொண்டாடப்பட்டது. டச்சுப்படை, கிழக்கிந்திய நிறுவனத்தின் படை என இரு அரசுகளை எதிர்த்துப் போரிட்டவர் இவர். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்குக் கப்பல் கொடுத்தவர், ஊமைத்துரை, மருது சகோதரர்களுக்கு ஆயுதம் கொடுத்து புரட்சிப்படைக்குப் பேருதவி புரிந்தவர். தூத்துக்குடி பனிமய மாதா பேரால யத்திலிருக்கும் தங்கத் தேரை செய்து தந்த இவரை, மக்கள் தேர்மாறன் என்று அழைக்கின்றனர். இம்மன்னரின் கல்லறை லசால் பள்ளியின் மைதானத்தில் உள்ளது. இம்மன்னரின் பிறந்த நாள் விழா, தையல் மிஷின், குடங்கள், சேலை என நானூறு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மார்த்தாண்டத்தில் போதை பொருள் கடத்தல்: தப்பி ஓடியவரை பிடிக்க ராஜஸ்தானில் தேடுதல்

நாகர்கோவில், டிச. 4- கேரளத்தில் போதைப் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மாபெரும் மக்கள் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். டிசம்பர் 3 சனியன்று படந்தாலு மூடு சோதனை சாவடியில் தனிப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் மகேஸ்வர ராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்தும்படி கூறியும் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்று குழித்துறை சப்பாத்து பாலம் பகுதியில் மடக்கினர். காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களிடமிருந்து எம்.டி.எம்.ஏ. என்கிற 300 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தான் இதனை கடத்தி வந்ததாகவும் அவர் காரில் இருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது. காரில் வந்த 2 பேர் மார்த்தாண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (30) மற்றும் கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என தெரியவந்தது. இவர்கள் மூலம் ராஜஸ்தானிலிருந்து கணேஷ் போதைப் பொருளை கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளது தெரிய வந்தது.. இந்த நிலையில் தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட  குமரி மாவட்ட காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களை  பிடிக்க குமரி மாவட்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது.