districts

மேலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருவர் பலி

மதுரை,ஏப்.29- மதுரை மாவட்டம் மேலூர் சூரக் குண்டு நான்கு வழி சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புதிய மேம்பாலம் பட்டும் பணி நடைபெற்று வருகிறது.   இந்நிலையில் ஏப்ரல் 29 சனிக்கிழ மையன்று அதிகாலை  சென்னையில் இருந்து ஆனஸ்ட் ராஜ் என்பவர் குடும்பத்தினர் 5 பேருடன் காரில் ராஜ பாளையம் நோக்கிச் சென்றார். கார் கட்டுப்பாட்டை இழந்து சூரக்குண்டு நான்கு வழிச்சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆனஸ்ட் ராஜின்  மனைவி பவானி மற்றும் ஓட்டுநர் பாலாஜி ஆகிய இரு வரும் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தனர். மேலும் பவானியின் 10 மாத குழந்தை ரயன்மகிழ் மற்றும் ஆனஸ்ட்ராஜ்,  அவரது  அம்மா உள் ளிட்ட மூவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இவர்கள் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி இதுபோன்று நிகழும் விபத்துகளை தடுக்க தேவையான நட வடிக்கைகளை எடுக்க வேண்டும்  என்று பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.