ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு திண்டுக்கல்லில் சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் கே ஆர் கணேசன் தலைமை வகித்தார் .மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாமன்ற உறுப்பினர்கள் ஜோதிபாசு, கே.எஸ்.கணேசன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே. ஆர். பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.