உடல் தானம் செய்த விவசாயிக்கு அரசு சார்பில் அஞ்சலி
சிவகங்கை, நவ.1- சிவகங்கை அருகே இருசக்கர வாகன விபத்தில் சிக்கி, மூளைச் சாவு அடைந்த விவசாயின் உடல் உறுப்புகள் தானம்.அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புளிக்குழம்பு கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (54). விவசாயியான இவர் அக்டோபர் 28 அன்று இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சிவகங்கை அருகே படு காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,மூளை சாவு அடைந்தார். உடல் உறுப்புகளை தானம் செய்திருந்ததால் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பங் கேற்று இறந்த செல்லபாண்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி
சிவகங்கை, நவ.1- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி நகர்மன்ற பகுதியில் உள்ள ரூ.10 லட்சம் செலவில் கழிவு நீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யும் பணியை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார். நிகழ்வில் திமுக நகர் செயலாளர் பொன்னுச்சாமி, சுகா தார ஆய்வாளர் பாண்டி செல்வம், நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், நகர்மன்ற உறுப்பினர்கள் சதீஷ்குமார், அழகர்சாமி, ராஜேஸ்வரி, எஸ்ஸார்நெட் வித்யாபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் '
திருவில்லிபுத்தூர், நவ.1- திருவில்லிபுத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் முகேஷ் ஜெயகுமார் தலைமையில் திருவில்லிபுத்தூர் மம்சாபுரம் வத்திராயிருப்பு கிருஷ்ணன் கோவில் ஆகிய ஊர்களில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர்களை அழைத்து குற்றம் போக்குவரத்து மற்றும் குற்ற விழிப்பு ணர்வு சம்பந்தமாக ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்களிடமிருந்து காக்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்வு காவல் துறை யால் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் தீபாவளி முன்னிட்டு திருவில்லிபுத்தூர் நகை கடை பஜார் சந்தாடை தெரு மாட வீதி போன்ற இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கவும் வாட்சிங் டவர் அமைக்கவும் பப்ளிக் அட்டஸ் சிஸ்டம் அமைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பேரிக்காடுகள் அமைத்து போக்குவரத்து நெரி சல் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளவும் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் மற்றும் குற்றம் சட்டம்-ஒழுங்கு ஆகிய நகர காவல் நிலையம் கிரைம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட ஹாரன்கள்: பேருந்துகளுக்கு அபராதம்
மதுரை, நவ.1- மதுரையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அதீத ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்திய 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் ஆணை யர் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுதும் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி மதுரை மாட்டுத் தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மதுரை வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய 3 வட்டார போக்கு வரத்துத்துறை சார்ந்த 10 க்கும் மேற்பட்ட ஆய்வா ளர்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களு டன் நவீன கருவிகளை கொண்டு புதனன்று ஆய்வு நடத்தினர். அப்போது பேருந்துகளில் இருந்த அதீத ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன. சோதனையில் கர்நாடகா, தமிழ்நாடு அரசின் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்து களில் சோதனை செய்யப்பட்டதில் பேருந்துகளில் அதீத ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதீத ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தி யதற்க்காகவும், எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்திய தற்காகவும் பேருந்துகளுக்கு தலா ரூ.10,000 வீதம் 3 லட்சம் ரூபாய்க்கு மேலாக அபராதம் விதிக்கப்பட்டது.
பில்டர் காபி நிலையம் அமைத்திட தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம்
இராமநாதபுரம், நவ.1- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிரா விடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதா ரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்கு வதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டி டங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறு வனத்தின் மூலம் அளிக்கப்படும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளு டன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானி யமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சத வீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங் கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கட னுதவி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
மகளிர் சுகாதார வளாகம் கோரி சிபிஎம் தலைமையில் சாலை மறியல்
திருவில்லிபுத்தூர், நவ.1- வத்திராயிருப்பு அருகே நெடுங்குளம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சிபிஎம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நட்த்தினர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் பேரூ ராட்சிக்குட்பட்ட நெடுங்குளம் 1-ஆவது வார்டு பகுதியில் பெண்களுக்கு சுகாதார வளாகம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். பின்னர் கூமாபட்டி-வத்திராயிருப்பு சாலையில் கொடிக்களம் பேரூராட்சி அலு வலகம் முன்பு சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் செயல் அலுவலர் நடந்த பேச்சு வார்த்தையில் தனியார் ஒருவரிடம் இரண்டு சென்டு நிலத்தை அரசு விலைக்கு வாங்கி சுகாதார வளாகம் கட்டுவதாக முடிவு ஏற்பட்டது. போராட்டத்தில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பெனரி, மாவட்டக் குழு உறுப்பி னர் ஜெயக்குமார், அய்யனார் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தியானந்தா வழக்கு ஆதீனம், அறநிலையத் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை, நவ.1- மதுரை ஆதீனத்துக்கு எதிராக நித்தி யானந்தா தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் மற்றும் அறநிலையத் துறை பதி லளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நித்தியானந்தா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீன மாக என்னை கடந்த 2012-ல் அப்போதைய ஆதீனம் அருணகிரிநாதர் நியமனம் செய் தார். எனது நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் எனது நியமன அறிவிப்பை 2019-ல் ஆதீனம் திரும்ப பெற்றார். இதற்கு எதிரான வழக்கு மதுரை மாவட்ட நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனம் அருண கிரிநாதர் உடல் நலக்குறைவால் 2021 ஆகஸ்ட் 12-ல் காலமானார். முறைப்படி அவருக்கு பின் நான்தான் மதுரை ஆதீன மாக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அதற்கு பதிலாக ஒப்பந்தம், உயில் ஏதும் இல்லாமல் மதுரை ஆதீன மடத்தின் 293வது ஆதீனமாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார். என்னை இளைய ஆதீனமாக 2012-ல் அருணகிரிநாதர் அறிவித்தார். பின்னர் அந்த அறிவிப்பை அவரே திரும்ப பெற்றார். அதற்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அருணாகிரிநாதர் கால மான நிலையில் அவருக்கு பதிலாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமியை எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு குறித்து மதுரை ஆதீனம், அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு விசா ரணையை ஒத்திவைத்தார்.