மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் பழனி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் என். பழனிவேல் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நவம்பர் 27 அன்று நடைபெற்றது. ஆயக்குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கமலக்கண்ணன், எம்.ராமசாமி, ஒன்றிய செயலாளர் பி.செல்வராஜ் மற்றும் நகர்க்குழு உறுப்பினர்களும் பழனியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வ.ராஜமாணிக்கம், பழனி நகர்மன்ற துணைத் தலைவர் கே.கந்தசாமி மற்றும் பலரும் மரியாதை செலுத்தினர்.