கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 94 மாணவ மாணவிகளுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஜூலை 16 அன்று சிவகாசி, தலைமை தபால் நிலையம் முன்பு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் பால்பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோதிஸ்வரன் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.