தேனி மாவட்டத்தில் பலத்த மழை வேரோடு சாய்ந்த மரம்
தேனி,ஏப்.25- தேனியில் செவ்வாய்க்கிழமையன்று மாலை பெய்த பலத்த மழை, சூறைக்காற்றினால் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் கார் சேதமடைந்தது . ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. தேனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் மேகமூட்டத்துடன் இதமான காற்று வீசத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையினால் நகரின் பல பகுதிகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. தேனி-போடி தேசிய நெடுஞ்சாலையான கோடாங்கி பட்டியில் பலத்த சூறைக்காற்று காரணமாக பழமை வாய்ந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதில் கார் சேதமடைந்தது. காரை ஓட்டிச் சென்ற தேனி ரத்தினம் நகரைச் சேர்ந்த ரவிக்குமார் சிறுகாயங்களுடன் மீட்கப் பட்டார். இந்தவிபத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரம் விழுந்ததால் வாகனங்கள் உப்புக்கோட்டை வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதே போல் ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், போடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
வாலிபர் சங்க புதிய கிளை துவக்கம்
மதுரை, ஏப்.25- மதுரை புறநகர் மாவட்டம் கப்பலூரில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது. கிளைத் தலைவராக என்.ராஜா, கிளைச் செயலாளராக ஆர்.சூரிய பிரசாத், துணைத் தலைவராக ஏ.அழகு சுந்த ரம், துணைச் செயலாளராக எம்.சுரேஷ் டி.கார்த்திக் உட்பட 15 பேர் கொண்ட கிளை அமைக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் வி.கருப்பசாமி, மாவட்டச் செயலாளர் பி.தமிழ ரசன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
காவல் சார்பு ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது
திருவில்லிபுத்தூர், ஏப்.25- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதி மன்றம் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயக கண்ணன்(40). இவர் 11-வது பட்டாளியனில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரு கிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதத்தில் கிருஷ்ணன் கோவில் அருகே குன்னூரில் உள்ள குலதெய்வம் கோயி லுக்கு குடும்பத்துடன் சென்றார். அன்று இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அன்று இரவு அதே பகுதியில் உள்ள அடுத் தடுத்த இரு வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து டி.எஸ்.பி சபரிநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை யை சேர்ந்த சுரேஷ்பாபு(33), கொம்புதியை சேர்ந்த சைவ துரை(54) ஆகிய இருவரை குற்றப்பிரிவு காவல்துறை யினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 பவுன் நகை மற்றும் ரூ.2.58 லட்சம் பணம் மீட்கப்பட்டது.
ஜக்கையன் கைதை கண்டித்து போராட்டம்
திருவில்லிபுத்தூர், ஏப்.25- விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நல விடுதி அருகே சமு தாயக்கூடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்ட முயன்று, போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். செவ்வாயன்று சமுதாய கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட வந்த ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் விருது நகர் மாவட்ட எல்லையான அழகாபுரியில் கைது செய்யப் பட்டார். இதைக் கண்டித்து ரைட்டன்பட்டி தெருவில் போராட்டத்தில் ஈடுபட்ட 80 பெண்கள் உட்பட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வைகை ஆற்றில் மணல் திருடியவர் கைது
கடமலைக்குண்டு, ஏப்.25- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கட மலைக்குண்டு கிராமத்தில் வைகை ஆற்றில் மணல் திரு டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து கடமலைக்குண்டு வைகை ஆற்றுப் பகுதியில் போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது நீர்வரத்து இல்லாத வைகை ஆற்றில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மூடைகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீஸ் வருவதை கண்டதும் அந்த பெண் தப்பி ஓடிவிட்டார். அங்கு மணலை மூடைகளில் திருடிய நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மணல் திருடியவர் கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த ராமானுஜம் என்பதும், அவருடன் சேர்ந்து மணல் திருடி யது சித்ரா என்பதும் தெரியவந்தது-. இதனையடுத்து ராமா னுஜத்தை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய சித்ராவை தேடி வருகின்றனர். ராமானுஜம் இதே பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் தலையாரியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தூரில் விவசாயிகள் தர்ணா
சின்னாளப்பட்டி,ஏப்.25- திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, சித்தரேவு அருகே உள்ள, புளியங்குளத்தை நம்பி 50 கிராம பொது மக்களும், சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நிலங்களும் உள்ளனர் புளியங்குளத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதா கக்கூறிய அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி கள், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஆத்தூர் தாலுகா அலுவலக நுழைவாயில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
ஆண்டிபட்டியில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை தேனி நீதிமன்றம் தீர்ப்பு
தேனி, ஏப்.25- ஆண்டிபட்டியில் முன் விரோதம் காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரின் மகன் சந்தோஷ் (19). இவர், முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் மகன் ஆனந்தராஜ் (36) என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் .இது குறித்து 16.10.2018 ஆம் தேதி செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு இறுதி விசாரணை முடிக்கப்பட்டு செவ்வாய்க் கிழமை தீர்ப்பு வழங்கிய கூடுதல் அமர்வு மன்ற நீதிபதி பி. கணேசன், குற்றவாளி ஆனந்தராஜூக்கு ஆயுள் தண்டனை யும், ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதத்தை கட்ட தவறினால் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மின்னல் தாக்கி பெண் பலி
திருவில்லிபுத்தூர், ஏப்.25- விருதுநகர் மாவட்டம,திருவில்லிபுத்தூர் அருகே சண்முகசுந்தராபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவர் மனைவி பொன்னுத்தாய். இவர் செவ்வாயன்று பட்டாசு தொழிற்சாலையில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது மின்னல் தாக்கி படு காயம் அடைந்தார் தகவல் அறிந்து திருவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரு டன் வந்த மூன்று பேர் காயமடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒன்றிய அரசை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்
மதுரை,ஏப்.25- மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதுரை கீழக்குயில்குடி விலக்கு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் நாகமலை பகுதி கிளைகள் சார் பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. நாகமலை புதுக்கோட்டை என்ஜிஓ காலனி கிளை செயலாளர் கு.செந்தில்ராஜா தலைமை வகித்தார். தாலூகா செயலாளர் மு.ஜெயகுமார் துவக்கி வைத்து பேசினார். திருப்பரங்குன்றம் தாலுகாகுழு உறுப்பி னர்கள் ம.தேவேந்திரன், பி.தமிழரசன் பி.அய்யாவு மற்றும் தெய்வேந்திரன் ஆகியோர் பேசினர்.