திருச்சுழி, மார்ச்.3- திருச்சுழி அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைப் பதை கண்டித்து அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், திருச்சழி வட்டம், ப.வாகை குளம் கிராமத்தில் அரசு மது பானக் கடை அமைக்க தொடர்ந்து சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இதை எதிர்த்து கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங் கத்துடன் இணைந்து பல் வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடையில் மதுபாட்டில்களை சிலருக்கு விற்பனை செய்வதாகவும், மதுக் கடையை திறக்க முயற்சி செய்வதாகவும் தக வல் கிடைத்தது. இதைய டுத்து, மீண்டும் கிராம மக்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைமையில் கடையை முற்றுகையிட்டனர். பின்பு, அனைவரும் காத்திருப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை வட்டாட்சியர் மதுபானக் கடை திறக்கப்படாது என வும், திங்களன்று மாலைக் குள் கடையில் உள்ள மது பாட்டில்கள் அனைத்தும் அகற்றப்படும் எனவும் உறுதி யளித்தார். இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப் ்பட்டது. முன்னதாக நடைபெற்ற போராட்டத்திற்கு ஞான தாஸ் தலைமையேற்றார். சிபிஎம் திருச்சுழி வட்ட செயலாளர் மார்கண்டே யன், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி, மாவட்டத் தலைவர் எஸ்.தெய்வானை, ஒன்றிய செய லாளர் செல்வராணி, குமரே சன், பூரணம், ஜேயக்குமார், நாம் தமிழர் கட்சியின் ஜோதி மணி, கருப்பசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.